puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 31 ஜனவரி, 2013

மு.க.அழகிரியின் வலது கரம் பொட்டு சுரேஷ் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை



மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலது கரம் என கூறப்படுபவரும், திமுக செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ், மர்ம நபர்களால் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரத்தியேக இணையதளம் – தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.




பிரத்தியேக இணையதளம் – தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.
ஜனவரி 31- எதிர்வரும் 13-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரத்தியேக இணையதளத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தேர்தல் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள், எண்ணிய வாக்குகளின் முடிவுகள், முண்ணிலையில் இருக்கும் கட்சியின் விவரங்கள், தேர்தல் ஆய்வுகள் என அனைத்தையும் இந்த இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

ஒபாமா விழாவில் கலந்துகொண்ட இளம்பெண் துப்பாக்கிச் சூட்டில் மரணம்

[ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, 01:51.52 பி.ப GMT ]
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவியேற்பு விழாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 15 வயதுப்பெண் அடையாளம் தெரியாத நபரால் சிகாகோவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏன்?; ஜெயலலிதா விளக்கம்

சென்னை: வன்முறை வெடிக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையால்தான் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது சரிதான்: சோ


Posted Date : 11:20 (31/01/2013)
2சென்னை: விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது சரிதான் என்று அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு சோ அளித்த பேட்டியில்," தமிழக அரசு ‘விஸ்வரூபம்’ படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒரு
திரைப்படத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை பொறுத்துக்கொள்ள முடியாது.

பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்" என்று கூறியுள்ளார்.

news.vikatan thanks

அமெரிக்கா போனிக்ஸ் நகரில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்!



on 31 January 2013.
அமெரிக்கா (Arizona) அரிசோனா மாநில போனிக்ஸ் (Phoenix) அலுவலக வளாகத்தில் ஒரு அடமான நிறுவனத்தில் வேலை பார்த்தோர் சிலரிடம் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மூவரை சுட்டான்.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

கஜகஸ்தானின் விமான விபத்து – 22 பேர் பலி


கஜகஸ்தானின் விமான விபத்து – 22 பேர் பலி
January 29, 2013  04:50 pm
கஜகஸ்தானின் கொக்க்ஷேடோ நகரில் இருந்து வட கஜகஸ்தான் பகுதிக்கு இன்ற காலை புறப்பட்டுச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வர்த்தக நகரமான அல்மாட்டி அருகே உள்ள கைசைல்டு என்ற கிராமத்தின் மீது பறந்துக் கொண்டிருந்த வேளையே குறித்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.

விமானத்தில் இருந்த 22 பயணிகளும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். மோசமான பனி மூட்டம் நிலவியதே இந்த விபத்துக்கு காரணம் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

thamilan. thanks

விஸ்வரூபம்:எதிர்ப்புகளை வகுப்பு வெறியாக சித்தரிக்க முயற்சி!


விஸ்வரூபம்-எதிர்ப்புகளை வகுப்பு வெறியாக சித்தரிக்க முயற்சி!
சென்னை:முற்போக்கு பிராமணனான கமலஹாசன் இயக்கி தயாரித்துள்ள அமெரிக்க ஆதரவுப் பெற்ற ‘விஸ்வரூபத்தின்’ முதல் பாகத்திற்கு எதிரான எதிர்ப்புகள் நாடு முழுவதும் கிளர்ந்து எழுந்துள்ளது. அதேவேளையில் இத்திரைப்படத்தின் 2-வது பகுதியின் சூட்டிங்கும் வெளிநாட்டில் நடைபெற்றுவருகிறது. இதன் 10 சதவீத சூட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

துலே கலவரம்: போலீசாரின் பங்கினை வெட்ட வெளிச்சமாக்கும் வீடியோ காட்சிகள்!



Dhule riots- Video shows policemen looting shops, destroying private property
புதுடெல்லி:மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் இம்மாதம் நடந்த வகுப்புக் கலவரத்தில் போலீஸின் பங்கினை நிரூபிக்கும் மேலும் பல புதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளை கொள்ளையடிக்கும் நபர்களுடன் இணைந்து போலீசும் ஈடுபடுவது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. போலீசின் தலையீடே கலவரம் உருவாக காரணம் என்று சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மியின் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு கண்டறிந்தது.

நீதி மறுக்கப்பட்ட ரிசானா, நெஞ்சை உருக்கும் ஆவணப் படம்!

[ திங்கட்கிழமை, 28 சனவரி, 2013, ]


நீதி மறுக்கப்பட்ட ரிசானா,
சவூதி அரேபியாவில் நான்கு வாரங்களுக்கு முன் சிரச் சேதம் செய்யப்பட்ட அப்பாவி இலங்கைப் பணிப் பெண் ரிசானாவின் சோகக் கதையை சித்திரிக்கின்ற ஆவண வீடியோ இது.

ரிசானா சிரச் சேதம் செய்யப்பட்டு அடுத்த நாட்களில் இணையங்களில் வெளியானது.

எஜமானனின் குழந்தையை படுகொலை செய்தார் என்கிற குற்றச்சாட்டு வழக்கில் ரிசானாவுக்கு நீதி மறுக்கப்பட்டமை இதில் தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது.

ரிசானா சிரச் சேதம் செய்யப்பட்டமை முற்றிலும் சகிக்க முடியாத 100 சதவீத தவறு என இதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

சவூதி அரேபியாவின் பணத் திமிருக்கு ஆன்மீக தலைவர்கள், அரசியல்வாதிகள் போன்றோரில் சிலர் அடி பணிந்து வக்காளத்து வாங்குபவர்களாக உள்ள நிலையில் இவ்வீடியோவின் உண்மையின் உரைகல்லாக அமைந்து உள்ளது.



.viyapu. thanks

மகளை கற்பழித்த தந்தைக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை: கோவை கோர்ட்டில் தீர்ப்பு


[ திங்கட்கிழமை, 28 சனவரி, 2013, ]
மகளை கற்பழித்த தந்தைக்கு
கோவை புலியங்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பழனிச்சாமி (50). இவர் மனைவி கலாமணி (வயது 45) மற்றும் பிளஸ் படிக்கும் 17 வயது மகளுடன் வசித்து வந்தார். மனைவி கலாமணி அருகில் உள்ள பேக்டரிக்கு இரவு வேலைக்கு சென்று வரக்கூடியவர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான பழனிச்சாமி, தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2009-ம் ஆண்டு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

திங்கள், 28 ஜனவரி, 2013

ஓரினக் கலப்புத் திருமணத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் பாரிஸில் பேரணி




நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் ஆயிரக் கணக்கானோர் ஒன்று கூடி ஓரினக் கலப்புத் திருமணத்துக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.

டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் : 6வது நபர் வயது குறைந்தவரே என அறிவிப்பு




டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 6வது நபர், 18வயதுக்கு உட்பட்டவர் என சிறுவர் சீர்திருத்த நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

பிரேசில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 245 பேர் பலி!


on 28 January 2013.

பிரேசிலின் ( Santa Maria) சந்தா மரியா கேளிக்கை விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 245 பேர் பலி. இன்று அதிகாலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. பேண்ட் குழுவினரின் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்த போது (Nightclub) கிளப்பினுள் இத் தீ விபத்து தோன்றியுள்ளது. 

எகிப்தில் பதற்றம்: கலவரம் ஓயாததால் ஒரு மாதத்திற்கு அவசரநிலை பிரகடனம்!



on 28 January 2013.
எகிப்தில் பதற்றம் நிலவும் நகரங்களில் ஒரு மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதாக அதிபர் முர்சி அறிவித்துள்ளார். எகிப்தில் அதிபர் முகமது முர்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்று வரும் மோதலில்...

சனி, 26 ஜனவரி, 2013

விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க எம்எல்ஏ வலியுறுத்தல்விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க எம்எல்ஏ வலியுறுத்தல்



First Published : 26 January 2013 12:26 AM IST
 முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் வீடியோ கேம் விளையாடிய படி அயர்ந்து தூங்கிய நீதிபதி!


நீதிமன்றில் வீடியோ கேம் விளையாடிய படி அயர்ந்து தூங்கிய நீதிபதி!


January 26, 2013  10:04 am
கோர்ட்டில் விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது, வழக்கை விசாரித்த நீதிபதி, அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். இது தொடர்பாக அவர் மீது, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள, பிளாகோவெஷ்சென்ஸ்க் கோர்ட்டின் நீதிபதி ஈவ்ஜெனி மாக்னோ.

உலகிலேயே மோசமான விமானசேவை சீனா ஏர்லைன்ஸ்!


உலகிலேயே மோசமான விமானசேவை சீனா ஏர்லைன்ஸ்!


January 26, 2013  09:59 am
உலக அளவில் விமான சேவை தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டதில் சீனா ஏர்லைன்ஸ் மிக மோசமானது என்ற பெயருடன் முதலிடம் பிடித்துள்ளது.

விமானத்தை மின்னல் தாக்கியதால் இன்ஜின் தீப்பற்றியது!


விமானத்தை மின்னல் தாக்கியதால் இன்ஜின் தீப்பற்றியது!


January 26, 2013  10:08 am
துருக்கி நாட்டு விமானத்தின் மீது, மின்னல் தாக்கியதில் இன்ஜினில் தீப்பிடித்தது. இதனால், பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரிலிருந்து,இஸ்மிர் என்ற நகருக்கு, 114 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது, மின்னல் தாக்கியது. இதில், விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்தது.இதையடுத்து, இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீப்பற்றிய விமானத்திலிருந்து, பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 

மின்னல் தாக்கிய இன்ஜினில் தீப்பொறி பறக்கும் காட்சியை விமானத்தில் இருந்த பயணி ஒருவர் ஜன்னல் வழியாகப் படம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

thamilan thanks

தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை - 53 பேர் பலி


தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை - 53 பேர் பலி


January 26, 2013  02:05 pm
பாகிஸ்தானில் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர் மலைப் பகுதி உள்ளது. இங்குள்ள திரா பள்ளத்தாக்கின் பெரும்பாலான கிராமங்கள் தலிபான் மற்றும் அன்சருல் இஸ்லாம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

விஸ்வரூபம் திரைப்படத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இன்று பார்க்கிறார்



கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் இன்று பார்வையிடுகிறார்.

கூடங்குளம் அணுமின் நிலைய இறுதிக்கட்ட சோதனை : இந்திய ரஷ்ய பொறியியலாளர்கள் 15 நாள் நடத்துவார்கள்?




கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இறுதி கட்ட சோதனை நடத்துவதற்கு, இந்திய அணுச் சக்திக்கழகம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 இதையடுத்து இந்திய ரஷ்ய பொறியியலாளர்கள் இணைந்து,  15 நாட்கள் சோதனை நடத்துவார்கள் என்றும் தெரிய வருகிறது.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

1.5 கிலோ முடியை சா‌ப்‌பி‌ட்ட இள‌ம்பெ‌ண்-ஆபரேஷ‌னி‌ல் அக‌ற்ற‌ம்


FILE
சாப்பிட்டவுடனஏற்பட்வயிற்றுவலி, வாந்தி காரணமாசிகிச்சைக்காஅனுமதிக்கப்பட்பெண்‌ணி‌னவயிற்றிலிருந்து 1.5 கிலமுடி அறுவசிகிச்சமூலமஎடுக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி செய்த பெண் முதலாளி மீது 100 வழக்குகள்

[ செவ்வாய்க்கிழமை, 22 சனவரி 2013, 05:12.14 பி.ப GMT ]
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பாதுகாப்பு ஆணையம் நேற்று, நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட டோரிஸ் நெல்சன்( Doris Nelson) என்பவரை வீட்டுச்சிறையில் வைத்துள்ளது.

விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் போராட்டம் : முஸ்லிம்களின் கூட்டமைப்பு அறிவிப்பு



E-mail Print PDF

நடிகர் கமல்ஹாசன், விஸ்வரூபம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இந்தப் படத்தை கடந்த 21.01.2013 அன்று முஸ்லிம் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியைப் பார்க்க கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்தார்.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன், தீவிரவாதிகளின் கையேடு என்பதைப் போல் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன.
தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிக்கின்றன என்பது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்தியத் திரைப்பட வரலாற்றில் இவ்வளவு மோசமாக ஒரு திரைப்படத்தை எடுத்திருக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை போன்ற நகரங்களெல்லாம் சர்வதேச தீவிரவாதிகளின் புகலிடங்கள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மாமா, மச்சான் உறவு முறைப் பேசி சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்கவல்லது ‘விஸ்வரூபம்’ திரைப்படம்.
‘வைதீக பிராமணனை விட, முற்போக்கு பிராமணன் மிகவும் ஆபத்தானவன்’ என்று சொன்ன ஐயா பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது.
இந்த திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும், தடை செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தமுமுக உள்ளிட்ட முஸ்லிம்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
Last Updated ( Tuesday, 22 January 2013 20:52 ) 

திங்கள், 21 ஜனவரி, 2013

கடல் திரைப்படமும், முத்த சர்ச்சைகளும்...


கடல் திரைப்படமும், முத்த சர்ச்சைகளும்...

இப்போதெல்லாம் ஒரு திரைப்படம், வெளிவருவதற்கு முன்பே எதன் பொருட்டாவது சர்ச்சையை ஏற்படுத்தி விளம்பரம் தேடி கொள்கிறது. அந்த வகையில் விஸ்வரூபம் டி.டி.ஹெச் மற்றும் முஸ்லீம் அமைப்பினர்களின் எதிர்ப்பால் விளம்பரம் பெற்றது என்றால் மணிரத்னத்தின் கடல் திரைப்படம், அப்படத்தில் உள்ள "முத்தக்காட்சிகளால்" சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறது. "முத்தக்காட்சி தமிழ் திரைப்படங்களுக்கு ஒன்று புதிதில்லையே" என்று கமல் போன்ற அனுபவஸ்தர்கள் சொல்லக்கூடும்.

மரண தண்டனை மற்றும் தூக்குத் தண்டனையை அகற்ற வேண்டும்!


மரண தண்டனை மற்றும் தூக்குத் தண்டனையை அகற்ற வேண்டும்!

January 21, 2013  05:33 pm

மனித நேயத்தை உணர்த்தும் வகையில் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து மரண தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது

அல்ஜீரியாவில் கண்டெடுக்கப்பட்ட 25 உடல்கள் தீவிரவாதிகளா? பணயக் கைதிகளா?



on 21 January 2013.
அல்ஜீரியாவில் சஹாரா பாலைவனத்தில் உள்ள எரிவாயு தொழிற்சாலையில், நடைபெற்ற பணயக் கைதிகள் விவகாரத்தில் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில், தொழிற்சாலையில் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்பதற்காக சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையின்போது..., 

மேடையில் இருந்த தலைவரின் தலை மீது துப்பாக்கி குறி!



on 20 January 2013.
பல்கேரிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தலையில் துப்பாக்கி வைக்கப்பட்ட நிலையில், அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். Movement for Rights and Freedoms கட்சித் தலைவரான அகமது டோகனுக்கு கிடைத்த ஓரிரு விநாடிகளை...

வன்முறை காட்சி; YouTube இல் வெளியிட்ட 2 இளைஞர்களுக்கு தூக்கு!



on 21 January 2013.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் (Tehran)உள்ள கடைத்தெரு ஒன்றில், ஒரு நபரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்யும் காட்சிகள் கடந்த டிசம்பர் மாதம் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இந்த காட்சியைக் கண்டு திகைப்படைந்தனர்.

திருவாரூர் மாவட்டம் - 101 தென்னக்கன்று அர்ப்பணித்த தமுமுக



E-mail Print PDF
திருவாரூர் மாவட்டம் கொரடசேரி மற்றும் அத்திக்கடை கிளை சார்பாக 101 தென்னக்கன்று அர்ப்பணித்த போது ஜமாத்தார் மற்றும் த மு மு க நிர்வாகிகளும்

இளையான்குடியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2013 ஆம் ஆண்டின் வென்று காட்டுவோம் நிகழ்ச்சி


Monday, 21 January 2013 15:26 administrator

E-mail Print PDF
அரசு தேர்வு எழுதும் 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும், ஆண்டுதோறும் "வென்று காட்டுவோம்" என்ற பயிற்சி முகாமினை பின் தங்கிய இளையான்குடி பகுதியில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Last Updated ( Monday, 21 January 2013 19:10 )