puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 28 ஜனவரி, 2013

ஓரினக் கலப்புத் திருமணத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் பாரிஸில் பேரணி




நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் ஆயிரக் கணக்கானோர் ஒன்று கூடி ஓரினக் கலப்புத் திருமணத்துக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக சட்டம் இயற்றுபவர்கள் செவ்வாய்க்கிழமை ஒன்று கூடி விவாதம் நடத்தவுள்ளனர். இந்தப் பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்த பதாதைகளில் கவர்ச்சியான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

உதாரணமாக, 'உரிமைகளின் சமபங்கீடு என்பது அச்சுறுத்தல் அல்ல!, உங்களுக்கென்ன வேண்டும்? சமவுரிமை! எப்போது வேண்டும்? இப்போதே!' என்பவற்றைக் கூறலாம். இன்னொரு பதாதையில் பிரெஞ்சு அரசின் முத்திரையுடன் இரு ஓரினச்சேர்க்கையாளர்கள் முத்தமிடுவது போன்ற படத்தின் கீழ் பின்வரும் வாசகங்கள் பதியப்பட்டிருந்தன.

அதாவது, 'சுதந்திரம், சமவுரிமை, மற்றும் சகோதரத்துவம் என்பவையே எமக்குத் தேவை. அதிகமும் வேண்டாம்! குறைவும் வேண்டாம்!; என்பவையே அவை. மேலும் இந்தப் பேரணி சுமார் 125 000 பொது மக்களைக் கவர்ந்துள்ளதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். இது கடந்த வருடம் டிசம்பர் மத்தியில் நிகழ்த்தப் பட்ட இது போன்ற பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காகும். இருந்த போதும் இரு கிழமைகளுக்கு முன்னர்  ஒரினக்கலப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் நகர வீதிகளில் பொது மக்கள் நிகழ்த்திய ஆர்ப்பாட்டப் பேரணியின் போது சுமார் 340 000 பொது மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரான்ஸ் அதிபரும் ஒரு சமூகநலன் விரும்பியுமான ஃப்ரான்கொயிஸ் ஹொல்லான்டே 2012 ஆம் ஆண்டு மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓரினக் கலப்புத் திருமணத்தை சட்டபூர்வமானதாக ஆக்குவேன் எனும் உறுதி மொழியைக் கொடுத்திருந்தார். மே 2012 ஆம் ஆண்டு இவர் பதவியேற்ற பின் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக