puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 19 நவம்பர், 2015

விமானத்தில் பணிப்பெண்களிடம் ரகளை: இந்து மகாசபா நிர்வாகி உள்பட 3 பேர் கைது

விமானத்தில் பணிப்பெண்களிடம் ரகளை: இந்து மகாசபா நிர்வாகி உள்பட 3 பேர் கைது
பீளமேடு, நவ.19–
கோவையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 10.45 மணிக்கு 130 பயணிகளுடன் தனியார் விமானம் புறப்பட தயாரானது. அப்போது பயணிகளில் 3 பேர் குடிபோதையில் விமான பணிப்பெண்களிடம் தகராறு செய்ததாகவும், 3 பேரும் விமான பணிப்பெண்களை செல்போனில் போட்டோ
எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பணிப்பெண்கள் விமான அதிகாரிகளிடம் புகார் செய்தனர். உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், செல்போனில் எடுத்த புகைப்படங்களை அழிக்குமாறு கூறினர். ஆனால் அதிகாரிகளிடமும் 3 பேரும் தகராறு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் பீளமேடு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40), ராஜா (40), சுபாஷ் (32) என்று தெரிய வந்தது. இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இவர்களில் செந்தில்குமாரும், ராஜாவும் வக்கீல்கள். சுபாஷ் இந்து மகாசபா இளைஞர் அணி நிர்வாகி ஆவார்.
இந்த சம்பவத்தால் 10.45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 1 மணி நேரம் தாமதமாக 11.45 மணிக்கு புறப்பட்டு சென்றது.

news maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக