puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 24 ஜூலை, 2013

ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது ஐரோப்பிய யூனியன்:ஈரான் கண்டனம்


லெபனானை ஆக்கிரமித்திருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தைத் தீவிரவாத அமைப்பாக சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பு ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தடை செய்யப் பட்டிருந்ததுடன் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 28 நாடுகளின் நிதியமைச்சர்கள் பங்கேற்ற மாதாந்தக் கூட்டத்தில் திங்கட்கிழமை இப்புதிய தடை உத்தரவு அறிவிக்கப் பட்டுள்ளது.

இத்தடையுத்தரவு காரணமாக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளுக்கு ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்ய விசா வழங்கப் படாது என்பதுடன் இவ்வமைப்புடன் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் முடக்கப் படும். லெபனானில் அந்நாட்டு அரச இராணுவத்துக்கு இணையான படை பலத்தைக் ஹிஸ்புல்லா கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவ்வமைப்புடன் தொடர்புடையவர்களைக் கண்டு பிடிப்பது மிகச்சிரமம் எனக் கருதப் படுகின்றது.ச் மேலும் இந்த அமைப்பு சிரிய யுத்தத்தில் சிரிய அரசு சார்பாகப் போரிட்டு வருகின்றது.

இதேவேளை இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் சரியான முறையில் முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாற்றத்துடனும் ஐரோப்பிய யூனியன் இந்த முடிவை எடுத்துள்ளது என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இப்பிராந்தியத்தில் யூதர்களின் ஆளுமையை அதிகரிப்பதற்கான முயற்சி இதுவெனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக