puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 17 ஜூலை, 2013

ஏவுகணைகளை கடத்திச் சென்ற வட கொரிய சரக்கு கப்பல் பனாமாவில் சிக்கியது!


on .
North Korean Missiles Eu17072013
Playவட கொரியாவில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று பனாமா கால்வாயின் சென்று கொண்டிருந்தபோது சோதனையிடப்பட்டதில், பலாஸ்டிக் ரக ஏவுகணைகள் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த சர்க்கரை மூடைகளுக்கு கீழே கன்டெயினர்களில் ஏவுகணைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கப்பல் கியூபாவில் இருந்து வடகொரியா நோக்கி சென்று கொண்டிருந்ததாக,

கப்பலில் கிடைத்த ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது. வழமையாக, பனாமா கால்வாயில் வேறு நாடுகளுக்கு செல்லும் கப்பல்களை பனாமா கடற்படை சோதனையிடுவது வழக்கம் இல்லை. ஆனால், தமக்கு வெளிநாட்டு உளவுத்துறை ஒன்றிடம் இருந்து கிடைத்த உளவுத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று பனாமா அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தகவல் கொடுத்த வெளிநாட்டு உளவுத்துறை எது என்பதை அவர் கூற மறுத்துவிட்டார். கப்பல் சோதனையிடப்பட்டபோது, அதில் 35 மாலுமிகள் இருந்தனர்.
அவர்கள், சோதனை அதிகாரிகளுடன் வன்முறையில் ஈடுபட முயன்றதால், கைது செய்யப்பட்டு பனாமாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சோதனை நடந்தபோது, கப்பல் கேப்டனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. கப்பலில் ஏவுகணைகள் அகப்பட்டது தொடர்பாக கியூபாவோ, வட கொரியாவோ இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இந்தக் கப்பல் தொடர்பாக அமெரிக்காவுக்கு வேறு சில ஆர்வங்களும் இருக்கலாம். காரணம், இதே கப்பல் ‘எதற்காகவோ’ ஒரு முறை சிரியாவில் உள்ள டார்டஸ் துறைமுகத்துக்க அருகில் உள்ள ரஷ்ய கடற்படை தளத்துக்கு சென்று வந்துள்ளது.
News :Source

eutamilar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக