சனா, மே 10-
ஏமன் நாட்டில், கடந்த பிப்ரவரி மாதம் கடத்தப்பட்ட, பின்லாந்து நாட்டு தம்பதியரும், ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும், விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த சில வருடங்களாக, ஏமனில் வெளிநாட்டவர்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஆயினும், எதுவும் எந்த தீங்கும் ஏற்படுத்தாமல் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஏமனின் பழங்குடியினரால் கடத்தப்பட்ட இம்மூவரும், ஓமன் நாட்டு அதிகாரிகள் வசம், புதன்கிழமை அன்று, இரு நாடுகளின் எல்லை ஓரம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் மூவரும், ஆஸ்திரியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள வியன்னா நகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. இந்த விடுதலைக்காக, ஓமன் அரசால் பிணைத்தொகை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதில், ஆஸ்திரியாவைச் சேர்ந்த டொமினிக் நெபுவார், பிப்ரவரி மாதமே, ஒரு வீடியோ தொலைக்காட்சியில் தோன்றி, தன்னைப் பிடித்து வைத்திருப்பவர்கள் கேட்கும் தொகையினைக் கொடுக்காவிட்டால், தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.
இதுபோலவே, ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டு, பின்னர், ஒரு வருடம் கழிந்தபின்னர், கத்தார் அரசு தலையிட்டதன்மூலம், பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால், இதற்காக பிணைத் தொகை எதுவும் அளிக்கப்படவில்லை என்று ஸ்விட்சர்லாந்து நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டில், கடந்த பிப்ரவரி மாதம் கடத்தப்பட்ட, பின்லாந்து நாட்டு தம்பதியரும், ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும், விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த சில வருடங்களாக, ஏமனில் வெளிநாட்டவர்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஆயினும், எதுவும் எந்த தீங்கும் ஏற்படுத்தாமல் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஏமனின் பழங்குடியினரால் கடத்தப்பட்ட இம்மூவரும், ஓமன் நாட்டு அதிகாரிகள் வசம், புதன்கிழமை அன்று, இரு நாடுகளின் எல்லை ஓரம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் மூவரும், ஆஸ்திரியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள வியன்னா நகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. இந்த விடுதலைக்காக, ஓமன் அரசால் பிணைத்தொகை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதில், ஆஸ்திரியாவைச் சேர்ந்த டொமினிக் நெபுவார், பிப்ரவரி மாதமே, ஒரு வீடியோ தொலைக்காட்சியில் தோன்றி, தன்னைப் பிடித்து வைத்திருப்பவர்கள் கேட்கும் தொகையினைக் கொடுக்காவிட்டால், தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.
இதுபோலவே, ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டு, பின்னர், ஒரு வருடம் கழிந்தபின்னர், கத்தார் அரசு தலையிட்டதன்மூலம், பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால், இதற்காக பிணைத் தொகை எதுவும் அளிக்கப்படவில்லை என்று ஸ்விட்சர்லாந்து நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக