puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 27 மே, 2013

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு. நோயாளிகள்,அதிகாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.


E-mailPrintPDF
இராமநாதபுரம் மே 26: இராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா இராமநாதபுரத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், பார்வையாளர்களையும் அங்கு பணி புரியும் அதிகாரிகளையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

முன்னதாக மருத்துவமனைக்கு சென்ற எம்.எல்.ஏ வை இணை இயக்குனர் மரு.மீனாட்சி சுந்தரம், நிலைய மருத்துவ அதிகாரி மரு.சகாய ஸ்டீபன் ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு, நவீன எக்ஸ்ரே பிரிவு, மற்றும் சி.டி.ஸ்கேன் பிரிவு, நரம்பியல் பிரிவு ஆகியவற்றையும் பார்வையிட்டார். அங்குள்ள கழிப்பறையில் காணப்படும் குறைகள் மற்றும் கழிவு நீர் தேங்குவது குறித்த குறைபாடுகள், தேவைகள் சீர் செய்யப்பட வேண்டியது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்படி உத்திரவிட்டார்.
பின்னர் மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இணை இயக்குனர் மரு.மீனாட்சி சுந்தரம், நிலைய கண்காணிப்பாளர் மரு.சகாய ஸ்டீபன் ராஜ் ஆகியோருடன் எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தினார். அப்போது இணை இயக்குனர், இம்மருத்துவமனையை தரம் உயர்த்தும் வகையில் விரைவில் உள்நோயாளிகள் பிரிவில் பொதுவான படுக்கைகள் 100ம் மனநோய் பிரிவில் கூடுதலாக 50ம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
த.மு.மு.க.மாவட்ட செயலாளர் பி.அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், இராமநாதபுரம் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பாகர் அலி, பசீர் அகமது, அகமது இப்ராஹிம், பரக்கத்துல்லா, பிஸ்மி (எ) நசுருதீன், ஜஹாங்கீர் அலி, அப்துல் ரஹ்மான் மற்றும் த.மு.மு.க. ம.ம.க.வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
LAST UPDATED ( MONDAY, 27 MAY 2013 20:02 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக