puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 27 மே, 2013

இறந்த நிலையில் பிரசவமான பெண் குழந்தை, பின் உயிர் பிழைத்த அதிசயம்


இறந்த நிலையில் பிரசவமான பெண் குழந்தை, பின் உயிர் பிழைத்த அதிசயம்

இறந்த நிலையில் பிரசவமான பெண் குழந்தை, பின் உயிர் பிழைத்த அதிசயம்

May 27, 2013  05:06 pm
அமெரிக்காவில் இதயம் மற்றும் நாடி துடிப்பு நின்ற நிலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்குழந்தை பிறந்த பின்உயிருடன் திரும்பிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. 




இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  அமெரிக்காவின் மிசவுரி நகரில் வசித்து வருபவர் எரிக்கா நிக்ரெல்லி (32), அங்குள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் நாத்தனும் அதே பாடசாலையில் ஆசிரியராக உள்ளார். 
மாத கர்ப்பிணியாக இருந்த எரிக்காகடந்த பெப்ரவரி மாதம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது,தன்னிலை இழந்து மயங்கி விழுந்தார். 

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அப்பெண்ணின் நாடித்துடிப்பும்,இதயத்துடிப்பும் முற்றிலுமாக அடங்கிப்போய் விட்டது. 

அவர் இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவர்கள்வயிற்றில் இருந்த குழந்தையை மட்டும் அவசர அவசரமாக சிசேரியன்’ அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். 

அதிர்ஷ்டவசமாக குழந்தையின் நாடி மற்றும் இதயத்துடிப்பு நன்றாகவே இருந்தது. குழந்தையை வெளியே எடுத்த பின்னர்எரிக்காவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த மருத்துவர்கள்அவரது இதயம் துடிப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள். 

இதனையடுத்துஅவருக்கு தீவிர சிகிச்சை அளித்து இயல்பு நிலைக்கு வரவழைத்தனர். 

இந்த அரிய சம்பவம் தொடர்பாக கருத்து கூறிய மருத்துவர்கள் பத்தில் ஒன்பது பேர்,முதல் கட்ட மாரடைப்பில் உயிரிழந்து விடுவார்கள். அபூர்வமாக எரிக்கா போல் சிலர் உயிர் பிழைக்கவும் வாய்ப்புள்ளது’ என்றனர். 

எரிக்காவிற்கு பிறந்த குழந்தைக்கு எலைனா எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது தாயும்,குழந்தையும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

thamilan. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக