puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 27 மே, 2013

இராமநாதபுரம் அரண்மனை,கேணிக்கரை பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைப்பது குறித்து எம்.எல்.எ.ஆய்வு.

E-mailPrintPDF
இராமநாதபுரம் மே 27: இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட அரண்மனை மற்றும் கேணிக்கரை பகுதிகளில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைப்பது குறித்து இராமநாதபுரம் தொகுதி MLA, எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆய்வு மேற்கொண்டார்.

இராமநாதபுரம் நகரில் பிரதான பஸ் நிறுத்தமான அரண்மனை பகுதியில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் குறிப்பாக முதியவர்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் வெயில் மழை காலங்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ அரண்மனை பகுதிக்கு சென்று பயணிகள் நிழற்குடை அமைக்கப் பட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர் இராமநாதபுரம் நகரின் மற்றொரு பிரதான பஸ் நிறுத்தமான கேணிக்கரை பகுதிக்கும் சென்று பயணிகள் நிழற்குடை அமையவுள்ள இடத்தை தேர்வு செய்து பார்வையிட்டார். அப்போது இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் (பொ) மதிவாணனிடம் சிறு வர்த்தகர்களுக்கு பாதிப்பின்றியும் பயணிகளுக்கு பயனுள்ள வகையிலும் அரண்மனை மற்றும் கேணிக்கரை பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை உடனே துவங்கி நிறைவேற்றும்படி எம்.எல்.ஏ உத்திரவிட்டார்.
த.மு.மு.க.மாவட்ட செயலாளர் பி.அன்வர் அலி,மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், இராமநாதபுரம் ஒன்றிய,நகர நிர்வாகிகள் பாக்கர் அலி, பசீர் அகமது, அகமது இப்ராஹிம், பரக்கத்துல்லா, பிஸ்மி (எ) நசுருதீன், ஜஹாங்கீர் அலி, அப்துல் ரஹ்மான் மற்றும் த.மு.மு.க., ம.ம.க.வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
LAST UPDATED ( MONDAY, 27 MAY 2013 20:41 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக