puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 12 மே, 2013

மனைவியை நெரித்து கொன்று தூக்கில் போட்ட கணவன்


 மே, 2013, ]
மனைவியை நெரித்து கொன்று
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி எலியத்தூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் கலியமூர்த்தி. இவரது மனைவி தேவி (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்
உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. சென்னை நீலாங்கரை எல்லையம்மன் கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தேவி சித்தாள் வேலை செய்து வந்தார். 


இவருக்கும், எதிர்வீட்டில் வசிக்கும் சுதாகருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த சுதாகரின் மனைவி பத்மா இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களது கள்ளத்தொடர்பு நீடித்தது. 

இதுகுறித்து நீலாங்கரை போலீசில் பத்மா புகார் செய்தார். போலீசார் சுதாகர், தேவியை காவல்நிலையம் அழைத்து விசாரித்தனர். அப்போது, இனி இருவரும் சந்திக்கக்கூடாது என எழுதி வாங்கி அனுப்பினர். இதற்கிடையே, மனைவி தேவியை பார்க்க கணவன் கலியமூர்த்தி நீலாங்கரை வந்தார். 

கடந்த 16,3,2013 அன்றிரவு சாப்பிட்டுவிட்டு தேவியும், கலியமூர்த்தியும் தூங்க சென்றனர். பிறகு சுதாகருக்கு போன் செய்த கலியமூர்த்தி, எனது மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள் என கூறியுள்ளார்.
அங்கு சுதாகர் வந்தபோது வீடு பூட்டி கிடந்ததால் நீலாங்கரை போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய தேவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், தேவியை கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டது கணவன் கலியமூர்த்தி என தெரியவந்தது. 

எனவே, தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த கலியமூர்த்தியை போலீசார் தேடினர். இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கலியமூர்த்தி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அங்கு விரைந்த போலீசார் கலியமூர்த்தியை கைது செய்தனர். 

viyapu thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக