puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 20 மே, 2013

சுகாதாரம் இல்லாத உணவு விற்பனையால் தாய்க்கு தண்டனை வழங்கிய அதிகாரி..!

[ திங்கட்கிழமை, 20 மே 2013, 
வடக்கு சவூதி அரேபியாவில் உள்ள அவிக்கிலா நகரை சேர்ந்த ஒருவர், அங்குள்ள உணவு விடுதியில் சாப்பிடச் சென்றார்.
அவருக்கு பரிமாறப்பட்ட 'சாண்ட் விச்'சில் செத்த ஈ கிடந்ததைக் கண்டு திகைப்படைந்த அவர், நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நகராட்சி தலைமை அதிகாரி ஜமால் அல் எனேசி, சுகாதாரமற்ற உணவை விற்ற உணவகத்தின் உரிமையாளரான பெண்ணுக்கு பெரிய தொகையை அபராதமாக விதித்தார்.

சுகாதாரமற்ற உணவுகளை விற்கும் நபர்களுக்கு அபராதம் விதிப்பது என்பது வழக்கமான நடைமுறை தான். எனினும், இந்த அதிகாரி அபராதம் விதித்தது யாருக்கு என்பதுதான் இவ்விவகாரத்தின் சிறப்பம்சம்.

ஜமால் அல் எனேசி-யின் தாயார் நடத்தி வந்த உணவகத்தில் தான் தரமற்ற உணவு விற்கப்பட்டது என்று தெரிந்தும் சட்டப்படி நடவடிக்கை எடுத்த அவரை அவிக்கிலா மேயர் பாராட்டியுள்ளார்.

இது மட்டுமின்றி, இந்த செய்தியை கேள்விப்பட்ட பலரும் 'பேஸ் புக்' மற்றும் "டுவிட்டரில்" அந்த அதிகாரியை புகழ்ந்து தள்ளியபடி உள்ளனர்.

நீதிக்குப் பின் பாசம்" என்று கடமையாற்றும் இந்த வளைகுடா நாட்டு அதிகாரிக்கு பாராட்டு குவிகிறது.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக