puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 20 ஏப்ரல், 2013

இந்தியா எல்லைக்குள் சீனாப் படைகள் நுழைந்ததால் பதற்றம்

[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 12:29.39 PM GMT +05:30 ]
இந்திய சீன எல்லையான காஷ்மீரில் உள்ள லடாக் பகுதிக்குள் சீனப் படைகள் அத்துமீறி சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் உள்ளே நுழைந்துள்ளது. இதனை அறிந்த இந்திய ராணுவமும் அங்கு சென்றுள்ளதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியினுள் சுமார் 8 கிலோ மீட்டர் வரை ஊடுருவிய சீனப் படைகள், அங்கு கூடாரம் அமைத்து தங்கியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இப்பகுதிக்குள் கடந்த 15 ஆம் தேதி இரவு 8 கிலோ மீட்டர் வரை ஊடுருவிய சீன மக்கள் விடுதலை ராணுவத்தை சேர்ந்த சுமார் 50 வீரர்கள் இங்கு கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.

இந்த ஊடுருவல் பற்றிய தகவல் அறிந்த இந்திய ராணுவத்தின் லடாக் ஸ்கவுட்ஸ் வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றதால் பதற்றம் நிலவுகிறது.  இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த உதம்பூர் வடக்கு ராணுவ பிரிவின் செய்தி தொடர்பாளர், இதைப் போன்ற ஊடுருவல்கள் கொடிநாள் கூட்டங்களின் மூலம் சரி செய்யப்படுவது வழக்கம் தான் என கூறினார்.

எனினும், இந்த புதிய ஊடுருவல் தொடர்பாக கொடி நாள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி சீன ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டும், சீன தரப்பில் இருந்து சரியான பதில் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

newindianews. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக