நாளுக்கு நாள் விசித்திர மனிதர்கள் பகுதியில் நாம் நம்பமுடியாத அதிசய பிறவிகளை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறோம். இன்று நீங்கள் பார்த்து வியப்படைய இருப்பது ஒரு சிறுமியின் பரிதாப நிலைமை. இரட்டை முகம் அல்லது தும்பிக்கை போன்றதொரு அமைப்பு முகத்தில் வளர்ந்த அதிசய சிறுமி தொடர்பான செய்தி இதோ…
உகண்டா நாட்டில் வசிக்கும் 9வயதாகும் சிறுமி த்ரின்னி. இவர் பிறக்கும் போது சாதாரண குழந்தை போன்று பிறந்திருந்தாலும் காலப்போக்கில் இச்சிறுமியின் முகத்தில் கால் பந்து போன்று ஒரு கட்டியாக சதை வளரத்தொடங்கியது. இது மூக்கை ஒட்டி நீளமாக வளர்ந்துள்ளமையால் பார்ப்பதற்கு யானையின் தும்பிக்கையில் பாதி அளவு வளர்ந்துள்ளமையை போன்று விசித்திரமான தோற்றத்தில் இருக்கிறது. உண்மையில் இது ஒரு நரம்பு சம்பந்தப்பட்ட நோயே. ஆனால் இதனை குணப்படுத்துவது அல்லது அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றுவது என்பது உகண்டா டாக்டர்களுக்கு ஒரு சவாலாகவே இருந்தது.
எனினும் சிறுமியின் நிலை கண்டு வருந்திய லண்டன் கிராம்வெல் மருத்துவமனையின் முன்னோடி அறுவைச்சிகிச்சை நிபுணர் இவரை குணப்படுத்த முடியும் என உறுதியளித்தார். லண்டன் வைத்தியர்கள் மீது நம்பிக்கை கொண்டு குழந்தை த்ரின்னியும் அவரது தாயார் சாராவும் லண்டன் பறந்தார்கள். டாக்டர்கள் குறிப்பிட்டபடி சுமார் 15 மணிநேர போராட்டமான ஆபரேசனுக்கு பின்னர் சிறுமியை உயிர் பிழைக்க வைத்துள்ளார்கள். இது அச்சிறுமிக்கு மட்டுமல்ல அவரது தாயார் சாராவுக்கும் இன்ப அதிர்ச்சியே..
puthiyaulakam thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக