: 08 April 2013
கூடுதல் வரதட்சிணை கேட்டு பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாக கணவன் உள்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாக்கியலெட்சுமி (28). இவரும், ராமநாதபுரம் சேதுபதி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ராமராஜ் என்பவரின் மகன் செல்வகுமாரும் 21.6.2007 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர்.
செல்வகுமார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். திருமணத்தின்போது பாக்கியலெட்சுமி 4 பவுன் நகை அணிந்து வந்தாராம்.
இதன் பின்னர் செல்வகுமார் வீட்டினர் கேட்டுக் கொண்டதால் தாய் வீட்டிலிருந்து 18 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் வாங்கி வந்தாராம்.
இந் நிலையில், மேலும் 10 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் வரதட்சிணையாக வாங்கி வருமாறு செல்வகுமார் கொடுமைப்படுத்தினாராம். இதற்கு அவரது தந்தை ராமராஜ், தாய் மல்லிகா, தம்பிகள் ராமகிருஷ்ணன், கணேச சுப்ரமணியன், மாரிமுத்து ஆகியோர் உடந்தையாக இருந்தார்களாம்.
இது குறித்து பாக்கியலெட்சுமி ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
காவல் ஆய்வாளர் மீனாம்பாள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
dinamani thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக