puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

ஈரான் பூகம்பம்: 30 பேர் மரணம்

ஈரான் பூகம்பம்: 30 பேர் மரணம்
 ஏப்ரல் 2013, 11:33.40 பி.ப GMT ]
ஈரானின் முதல் அணுமின் உற்பத்தி நிலையம் புஷேர் நகரில் செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தின் அருகே இன்று மாலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. துறைமுக நகரமான புஷேரில் இருந்து 60 மைல்கள் தெற்கில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், அப்போது 6.1 ரிக்டர் ஆக பதிவானதாகவும் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் உள்ள ஈரான் நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. 

ஈரான் மட்டுமின்றி, துபாய், ஷார்ஜா மற்றும் பிற அமீரக நாடுகள் முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசரம் அவசரமாக வெளியேறி திறந்த வெளிக்கு வந்தனர். துபாய் மெரினா பகுதியில் உள்ள கட்டிடங்கள் காலி செய்யப்பட்டு, ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

மனாமாவில் உள்ள முக்கியமான அலுவலகங்களில் உள்ள ஊழியர்களும் உடனடியாக வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து குலுங்கியதால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். 800 காயம் அடைந்துள்ளனர். சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக