puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 1 ஏப்ரல், 2013

ராமநாதபுரம் அருகே இருதரப்பினர் நள்ளிரவில் மோதல் அதில் 14 பேர் மீது வழக்கு


ராமநாதபுரம் அருகே இருதரப்பினர் நள்ளிரவில் மோதல் அதில் 14 பேர் மீது வழக்கு

கவாஸ்கர் அவர்களால் Monday 1st April 2013 
ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளத்தில் ஒரு சமுதாயத்தினர் தெரு முனை பிரசார கூட்டம் நடத்தினர். அப்போது மற்றொரு சமுதாயத்தை தரக் குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூட்டம் முடிந்து இரவில் பிரசார குழுவினர் சென்றபோது, ஒரு பிரிவினர் அவர்களை வழிமறித்து தரக்குறைவு பேச்சு பற்றி கேட்டுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இது, இருதரப்பினர் இடையே மோதலாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தின்போது கற்களும் வீசப்பட்டன. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு முரளீதரன், தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துச்செல்வம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள், கோஷ்டி மோதலை தடுக்க முயன்றனர். அப்போது கல்வீச்சில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச் செல்வம் காயம் அடைந்தார். இதேபோல ஒரு தரப்பைச் சேர்ந்த முகமது பஷீத் என்பவரும், மற்றொரு பிரிவில் உபயசெல்வம், முருகானந்தம் ஆகியோரும் காயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக முகமது பஷீத் கொடுத்த புகாரின்பேரில் 6 பேர் மீதும், பிரசாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் 8 பேர் மீதும் அழகன்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newsalai tkanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக