on 08 March 2013.
அவர்கள்
நேற்று இரவு கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் இலங்கை கடற்படை
அங்கு வந்துள்ளது. மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அவர்களை
தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் காயம் அடைந்தனர்.
இது
குறித்து காயம் அடைந்த மீனவர் சந்திரகுமார் கூறுகையில், இலங்கை கடற்படையினர்
எங்களுடைய ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட கருவிகளை பறித்துக் கொண்டனர்.
எங்கள் வலைகளை நறுக்கிவிட்டனர். ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கருவிகளை இழந்துவிட்டோம்.
இந்த தாக்குதல் நடந்தபோது ஒரேயொரு மீனவர் மட்டும் படகின் என்ஜினுக்கு அருகில்
ஒழிந்து கொண்டதால் தப்பித்தார் என்றார்.
இன்று
கரை திரும்பிய அவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த
2 நாட்களுக்கு முன்பு தான் காரைக்காலைச் சேர்ந்த 40 வயது மீனவர் ஒருவர் இலங்கை
கடற்படையால் சுடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
News
: Source
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக