காரைக்குடி,
இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக ஐ.நா.சபையின்
மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும்
தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்றால், மத்திய அமைச்சரவைக்கு தி.மு.க.
அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொண்டு
, தி.மு.க. அமைச்சர்களைப் பதவி விலகச் செய்வேன்
என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி
அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து, இம்மாதத்தில் நடைபெறும்
ஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலின் கூட்டத்தொடரில், இலங்கை பிரச்னை தொடர்பாக
சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்ற அமெரிக்காவின்
தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று மத்திய
நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று காரைக்குடியில் கூறினார்
dailythanthi thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக