puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 27 மார்ச், 2013

குறுக்கீடு காரணமாக நடவடிக்கை இலங்கையில் பி.பி.சி. ஒலிபரப்பு நிறுத்தம்


லண்டன்
பிரசித்த பெற்ற பி.பி.சி. வானொலிச் சேவை இலங்கையிலும் கிடைத்து வந்தது. குறிப்பாக தமிழ் மக்கள் வாழுகிற பகுதியில் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் பற்றிய செய்தியை பி.பி.சி. கொண்டு போய் சேர்த்து வந்தது.

ஆனால் இந்த வானொலியின் தமிழ் மற்றும் ஆங்கிலச் சேவையில் தடங்கலும், குறுக்கீடும் ஏற்படுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து இலங்கையில் தனது ஒலிபரப்புச் சேவையை பி.பி.சி. நிறுத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக பி.பி.சி.யின் உலக சேவை இயக்குனர் பீட்டர் ஹார்ராக்ஸ் கூறுகையில், ‘‘இலங்கையில் உள்ள எங்கள் நேயர்களுக்கு ஒலிபரப்புச்சேவை வழங்க முடியாமல் போனதற்கு வருந்துகிறோம். தொடர்ந்து எங்கள் ஒலிபரப்புச் சேவையில் திட்டமிட்டு குறுக்கீடு செய்வது என்பது நம்பிக்கை மோசடி ஆகும். அதை பி.பி.சி. அனுமதிக்காது’’ என்றார். தமிழ் மக்களுக்கு எதிராக ராஜபக்சே இழைத்து வருகிற அநீதியில் இந்தச் செயலும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

dailythanthi thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக