தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கடந்த 32 நாட்களாக உண்ணாவிரதம்
இருந்துவரும் காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக
வந்த தகவலின் அடிப்படையில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவரும்,
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா கடந்த 02.03.2013
அன்று சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் சசிபெருமாள் அவர்களை முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் குமரி ஆனந்தனுடன் சந்தித்து
உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். இவர்களது கோரிக்கை ஏற்று ஒரிருநாட்களில் உண்ணாவிரத்தை கைவிடுவதுப்பற்றி முடிவு எடுப்பதாக சசிபெருமாள் தெரிவித்துள்ளார்.
உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். இவர்களது கோரிக்கை ஏற்று ஒரிருநாட்களில் உண்ணாவிரத்தை கைவிடுவதுப்பற்றி முடிவு எடுப்பதாக சசிபெருமாள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக