திங்கட்கிழமை,
மார்ச் 11,
அம்மான், மார்ச் 11-
சிரியா அதிபர் பஷீர் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் மக்களை கைது செய்யும் அரசு ராணுவம் அவர்களை வெட்டிக் கொன்று அலேப்போ நகரம் வழியாக ஓடும் ஆற்றில் வீசி விடுகின்றனர்.
நாள்தோறும் இந்த ஆற்றில் பல பிணங்கள் மிதந்து வருவதால் உள்ளூர் மக்கள் இந்த ஆற்றை வீர மரணம் அடைந்தவர்களின் ஆறு என்று அழைக்கின்றனர்.
ஆசாத்துக்கு எதிராக பேசி வரும் பொதுமக்களையும் கைது செய்து ரகசிய இடத்தில வைத்து விசாரிக்கும் ராணுவத்தினர், அவர்களையும் சுட்டுக்கொன்று பிணங்களை இந்த ஆற்றில் வீசி விடுகின்றனர்.
சிரியாவில் நடைபெறும் இந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் 65 பிணங்கள் இந்த ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன. இந்நிலையில், நேற்று 20க்கும் மேற்பட்ட பிணங்கள் இந்த ஆற்றில் மிதந்து வரும் காட்சியை ஒரு தனியார் தொலைக்காட்சி படமாக்கியுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பலர் 20 வயதிலிருந்து 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள். கைகள் கட்டப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில் பல பிணங்கள் மிதந்து வந்ததாகவும், கொல்லப்பட்டவர்களில் சரிபாதி பேர் அப்பாவி இளைஞர்கள் என்றும் அந்த செய்தி தெரிவித்தது.
சிரியா அதிபர் பஷீர் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் மக்களை கைது செய்யும் அரசு ராணுவம் அவர்களை வெட்டிக் கொன்று அலேப்போ நகரம் வழியாக ஓடும் ஆற்றில் வீசி விடுகின்றனர்.
நாள்தோறும் இந்த ஆற்றில் பல பிணங்கள் மிதந்து வருவதால் உள்ளூர் மக்கள் இந்த ஆற்றை வீர மரணம் அடைந்தவர்களின் ஆறு என்று அழைக்கின்றனர்.
ஆசாத்துக்கு எதிராக பேசி வரும் பொதுமக்களையும் கைது செய்து ரகசிய இடத்தில வைத்து விசாரிக்கும் ராணுவத்தினர், அவர்களையும் சுட்டுக்கொன்று பிணங்களை இந்த ஆற்றில் வீசி விடுகின்றனர்.
சிரியாவில் நடைபெறும் இந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் 65 பிணங்கள் இந்த ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன. இந்நிலையில், நேற்று 20க்கும் மேற்பட்ட பிணங்கள் இந்த ஆற்றில் மிதந்து வரும் காட்சியை ஒரு தனியார் தொலைக்காட்சி படமாக்கியுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பலர் 20 வயதிலிருந்து 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள். கைகள் கட்டப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில் பல பிணங்கள் மிதந்து வந்ததாகவும், கொல்லப்பட்டவர்களில் சரிபாதி பேர் அப்பாவி இளைஞர்கள் என்றும் அந்த செய்தி தெரிவித்தது.
.maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக