February 9,
2013 03:49 pm
ஆபிரிக்காவிலுள்ள மாலி
நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராணுவ புரட்சி
ஏற்பட்டது. தற்போது அங்கு இடைக்கால ஜனாதிபதி தலைமையில்
ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைநகர் பமாகோவின் மேற்கே அமைந்துள்ள
துணை இராணுவப்படையினர் நேற்று
திடீரென்று புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவ தலைமைக்கு எதிராக கோஷங்களை முழங்கினர்.
இதனால் அந்த
பகுதிக்கு இராணுவத்தினர் விரைந்து சென்று முகாமை முற்றுகையிட்டார்கள். அங்கு
புரட்சியில் ஈடுபட்ட துணை இராணுவ வீரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை
நடந்தது. இந்த முகாம் பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. துணை ராணுவ
வீரர்கள் சிலர் மீது சமீபத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு
எதிராகவே புரட்சி வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த மாலி
நாட்டில் அல்கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பிரான்சு இராணுவம் ஈடுபட்டு வருகிறது. தீவிரவாதிகள் வசம் இருந்த பல
நகரங்களை மீட்டு வருகிறார்கள். இதற்கிடையில் தற்போது மாலி துணை
இராணுவத்தினர் புரட்சியில் குதித்தது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
/thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக