puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 6 ஜனவரி, 2014

ஆண்-பெண் சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவு தவறில்லை! – டெல்லி உயர்நீதிமன்றம்

delhi

புதுடெல்லி: திருமணத்துக்கு முன்பாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவினை, பலாத்காரமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை அளித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் மீது, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தில்லி போலீஸாரிடம் கடந்த 2011ஆம் ஆண்டு புகார் தெரிவித்தார்.
அதன் பேரில் அந்த இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி வீரேந்தர் பட் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவினை பலாத்காரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தார்.
படித்து விட்டு அலுவலகம் செல்லும் அந்தப் பெண் சுய விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துள்ளார். வாக்குறுதி அளித்தபடி அந்தப் பெண்ணை அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் அது பாலியல் பலாத்காரம் ஆகாது. தனது செயலால் ஏற்படும் பின்விளைவுகளை அந்தப் பெண் உணர்ந்து பார்த்திருக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஒரு நபர் அளிக்கும் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. சம்பந்தப்பட்ட ஆண் வாக்குறுதியை நிறைவேற்றலாம், அல்லது நிறைவேற்றாமலும் போகலாம். அனைத்து மதச் சித்தாந்தங்களுக்கும் எதிரான ஒழுக்கமற்ற செயலில் ஈடுபடுகிறோம் என்பதை அந்தப் பெண் உணர்ந்திருக்க வேண்டும்.
உலகில் எந்த மதமும் திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவு வைத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞரை விடுவித்து அவர் உத்தரவிட்டார்.


thoothuonline thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக