puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 6 ஜனவரி, 2014

முஸஃபர் நகர்: பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களை விட்டு வெளியேற மறுப்பு!


musafir
முஸஃபர்நகர்: உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டனர். இவர்கள் ஷாம்லியில் மலேக்பூர் முகாமில் தங்கியுள்ளனர்.அதிகாரிகளின் கோரிக்கையை இவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

சொந்த வீடுகளுக்கு திரும்புவதற்கு அவர்கள் அஞ்சுவதால் முகாம்களை விட்டு வெளியேற மறுக்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடுமையான குளிரால் முகாம்களில் துயரங்களை அனுபவிப்பதால் அவர்களின் வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக ஷாம்லி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் பி.கே.சிங் கூறுகிறார்.
பாதிக்கப்பட்ட மக்களை பலம் பிரயோகித்து நீக்கம் செய்ய முயற்சித்ததாக வெளியான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த முகாமில் தங்கியுள்ளனர். வீடுகளுக்கு திரும்பும் மக்களுக்கு பாதுகாப்பை உறுதி அளித்துள்ளதாக எஸ்.பி பகவத் ஜே.கே.ஷாஹி தெரிவித்தார்.
வீடுகளுக்கு திரும்ப மக்கள் தயங்கியதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளின் குழு திரும்பிச் சென்றது.

thoothuonline thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக