puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 9 டிசம்பர், 2013

பெண்களே எஸ்.எம்.எஸ் தொல்லைகளிலிருந்து எவ்வாறு தப்பிக்கலாம்?


[ திங்கட்கிழமை, 09 டிசெம்பர் 2013, 08:24.34 AM 
இன்றைய நவீன உலகில் செல்போன்களால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.
நவீன தொழில்நுட்பமான எம்.எம்.எஸ், தகவல் தொடர்புக்கு, அவசியமான அற்புத தொழில்நுட்பம் என்றால் அதில் மிகையில்லை.
ஆனால் செல்போன்களில் வளர்ச்சி அசுரவேகத்தில் சென்றாலும் இதனை உபயோகிக்கும் பெண்களின் பிரச்சனைகளும் அசுரவேகத்தில் செல்கிறது.
எப்பிடி சாப்பிட்டிங்களா?’என்று கேட்பதில் தொடங்கி ‘குட் நைட் டியர்’ என்று வழிவது வரை செல்போன் வழியே குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். இதுபோலவே படங்கள், காணொளிகள், ரெக்கார்டிங் தகவல்களை எஸ். எம்.எஸ் என்ற முறையில் அனுப்புகிறார்கள்.

ஆனால் அவற்றால் எல்லையற்ற பிரச்சினைகள் முளைத்திருப்பதால் குற்றம் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. படம்பிடிக்கவும், பிறகு பயமுறுத்தவும் பயன்படும் எம்.எம்.எஸ் பல பெண்களின் வாழ்க்கையை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது.
இன்னொருபுறத்தில் எஸ்.எம்.எஸ். ஆபாசக் காட்சிகள் இளைஞர்களை செக்ஸ் போதை அடிமைகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் பாதிப்பு என்னவோ பெண்களுக்குத்தான் அதிகம். அதனால் பெண்கள் இதில் மிகுந்த விழிப்புணர்வு பெறவேண்டும்.
பெண்களே உங்களுக்காக சில ஆலோசனைகள்
* பெண்கள் ரகசிய செய்கைகளில் ஈடுபடுவது தங்கள் சுயகவுரவத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்து என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதன் மூலம் அவர்களது குடும்ப கவுரவத்திற்கும் இழுக்கு ஏற்படக்கூடும். சமூக நெருக்கடிகளையும் அது உருவாக்கும். ஆகவே இத்தகைய இழப்புகளை எல்லாம் நினைவில்கொண்டு, வெளிவட்டார தொடர்புகளை பெண்கள் எல்லைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
* பெற்றோரின் கண்காணிப்பைத்தாண்டி நகரங்களில் தங்கி படிக்கும, வேலைபார்க்கும் பெண்கள்தான் அதிகமாக எஸ்.எம்.எஸ் வலையில் விழுகிறார்கள். கட்டுப்பாடற்ற சுதந்திரம் அவர்களை கட்டவிழ்த்து விடுகிறது. தனிமையும், நகரச்சூழலும் யாருடனாவது நட்பு கொள்ளத் தூண்டுகிறது.
* பெண்களின் பலவீனத்தை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் இளைஞர்கள் தங்கள் வலையில் அவர்களை எளிதில் வீழ்த்திவிடுகிறார்கள். கண்டகண்ட புகைப்படங்கள், இரட்டை அர்த்த எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வைப்பார்கள். இதிலெல்லாம் தவறு இல்லை, இதெல்லாம் சாதாரண விடயம் என்று மூளைச்சலவை செய்வார்கள். அவர்களை நம்பியோ அல்லது பதிலுக்குப் பதிலாகவோ பெண்களும் அதே பாணியில் ஏதாவது எஸ்.எம்.எஸ். செய்துவிட்டால் போதும். அந்த சிறு துரும்பை வைத்துக் கொண்டு ‘பிளாக்மெயில்’ செய்தே தங்கள் காரியத்தை சாதித்து விடுவார்கள்.
* பணம் தேவைப்பட்டால் பணம் பறிப்பார்கள். ஊர் சுற்ற, உல்லாசம் அனுபவிக்க என்று தாங்கள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் அந்த பெண்களை வளைத்து பயன்படுத்திக் கொள்வார்கள்.
* இந்த சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பெண்கள் அவமானத்திற்குப் பயந்து மீள முடியாமல் தவிப்பார்கள். தவறான முடிவுகளும் எடுத்துவிடுவார்கள்.
* பெண்கள் ஒருபோதும் வலைவீசும் எஸ்.எம்.எஸ்.களுக்கு பதிலளிக்கக் கூடாது. செல்போனிலும் தேவையின்றி பேசக்கூடாது. பெண்களின் ஆபாசம் கலந்த பேச்சு பெரும்பாலும் ஆண்களால் பதிவு செய்யப்படுகிறது. எனவே இத்தகைய பேச்சுக்களை பெண்கள் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பாதிப்பு ஆண்களுக்கு இல்லை பெண்களுக்கு தான்

. newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக