puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 19 நவம்பர், 2013

ராமநாதபுரத்தில் 2 போலீஸ்காரர்களை பாம்பு கடித்தது: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

ராமநாதபுரத்தில் 2 போலீஸ்காரர்களை பாம்பு கடித்தது: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ராமநாதபுரம், நவ. 19–
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு ஆயுதப்படை போலீஸ்காரர் ராமேசுவரத்தை சேர்ந்த முனியசாமி மகன் நம்புராஜ் (21) என்பவர் தங்கியுள்ளார். நேற்று இரவு நம்புராஜ் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதரில் மறைந்திருந்த ஒரு பாம்பு அவரை கடித்தது.
உடனே அவர் பாம்பை பிடிக்க முயன்றார். பாம்பு அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தது. அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் கடலாடியை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகப் பெருமாள் என்பவரையும் பாம்பு கடித்தது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர், பாம்பை விரட்டிச் சென்று பிடித்தார்.
பின்னர் நம்புராஜ், முருகப்பெருமாள் ஆகியோர் தங்களை கடித்த பாம்புடன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடித்த பாம்பு கண்ணாடி விரியன் வகையைச் சேர்ந்தது என தெரியவந்தது.

.maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக