puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 28 அக்டோபர், 2013

மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி!

மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி!

patna
பாட்னா: இந்தியாவின் பீகார் மாநிலத்தின் தலைநகரான பட்னாவில் நரேந்திர மோடியின் கூட்டம் ஒன்றில் தொடர்ச்சியாகக் குண்டுகள் வெடித்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதல்களில் மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள். வெடிக்காத பல குண்டுகளும் அங்கு மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியும், இந்து தேசியவாத கட்சியுமான பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளரான நரேந்திர மோடியின் உரையைக் கேட்பதற்காக  நகர மையத்தில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் கூடியிருந்தபோது இந்த குண்டுகள் வெடித்துள்ளன.
பீகாரில் நிகழ்ந்தது தீவிரவாத தாக்குதலா? அரசியல் சதியா? என்று கூற முடியாது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறியுள்ளார்.
குண்டுவெடிப்பை பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் கண்டித்துள்ளனர். தேசிய புலனாய்வு ஏஜன்சி மற்றும் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.) ஆகியன பீகாருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

thoothuonline thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக