puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 12 அக்டோபர், 2013

ஆண்டுதோறும் ரேபிஸுக்கு பலியாகும் 24,000 ஏழை ஆபிரிக்கர்கள்

ஆண்டுதோறும் ரேபிஸுக்கு பலியாகும் 24,000 ஏழை ஆபிரிக்கர்கள்

ஆண்டுதோறும் உலக மக்களில் சுமார் 
55 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடியால் பலியாவதாக தெரிய வந்துள்ளது. வெறிநாய்க்கடியால் ரேபிஸ் என்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகி அப்பாவி மக்கள் பலியாவதைத் தடுக்க உலக நாடுகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் படிவீட்டில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசிப் போடும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இருந்த போதும்,ஆண்டுதோறும் சுமார் 55 ஆயிரம் பேர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகி பலியாவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது
.


செனகல் நாட்டு தலைநகர் டாகரில் வெறிநாய் கடி குறித்த நிபுணர்கள் மாநாட்டில்நாய்கடி மற்றும் செல்லப்பிராணி கடிப்பதால் ஏற்படும் அபாயத்தை தடுக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்றில்உலகம் முழுவதும் இதன் பாதிப்பினால் ஆண்டிற்கு சுமார் 55 ஆயிரம் பேர் பலியாவதாக தெரிய வந்துள்ளது.
அதிலும் குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் மட்டும் 24 ஆயிரம் பேர் பலியாகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆபிரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதற்கு முக்கியக் காரணம்வெறிநாய்க்கடியால் பாதிக்கப் பட்டவர்கள் அதற்குரிய மருத்துவ வசதி மேற்கொள்ளாமல் போவதே என அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.


வெறி நாய்க்கடிக்கு போடப்படும் ஒரு ஊசியின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.800.பொதுவாக நாய் கடியால் பாதிக்கப்படுபவர் குறைந்தபட்சம் முதல் ஊசி போட வேண்டும். பொதுவாக மக்களின் வறுமையே பலி எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக சொல்லப்பட்டாலும்சில நாடுகளில் வெறிநாய்க்கடிக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

thamilan thanks
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக