puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மோடி சொன்னதெல்லாம் பொய் என்று நிரூபணம்! வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் குஜராத்திற்கு இடமில்லை


modi
புதுடெல்லி: மோடியின் குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது இப்பொழுது மீண்டும் மத்திய அரசு நியமித்த நிபுணர்கள் குழு அறிக்கை மூலம் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

பின்தங்கிய மாநிலங்களுக்கு கூடுதல் மத்திய அரசின் நிதி வழங்க வேண்டும் என்று  சிபாரிசு செய்து மத்திய அரசு நியமித்த நிபுணர்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது. கேரளாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.
ஆனால்,ஹிந்துத்துவா சக்திகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் கொண்டாடும் மோடியின் குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. இது தொடர்பான அறிக்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையிலான கமிட்டி சமர்ப்பித்துள்ளது.
இந்தியாவில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் குஜராத்திற்கு 12-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் வளர்ந்து வரும் மாநிலங்களின் (குறைந்த வளர்ச்சி) பட்டியலில்தான் குஜராத் இடம் பெற்றிருக்கிறதே தவிர வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இடம் பெறவில்லை.
கோவா, கேரளாவுக்கு அடுத்து தமிழ்நாடு, பஞ்சாப், மஹராஷ்ட்ரா, உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பீகார் உள்ளிட்ட சில மாநிலங்கள் கூடுதல் மத்திய அரசின் நிதிக்காக பின்தங்கிய மாநில அந்தஸ்தை கோரிய பொழுது நிதியமைச்சகத்தில் முக்கிய நிதி ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன் தலைமையில் இது குறித்து ஆராய மத்திய அரசு ஒரு கமிட்டியை நியமித்தது.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களை பல்நோக்கு குறியீட்டு எண் அடிப்படையில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள், வளர்ந்து வரும் மாநிலங்கள், வளர்ச்சியடையாத மாநிலங்கள் ஆகிய 3 பிரிவாக ரகுராம் ராஜன் கமிட்டி பிரித்துள்ளது.
தனி நபர் நுகர்வு, கல்வி, சுகாதாரம், வீட்டு உபகரணங்கள், வறுமை, மகளிர் பாதுகாப்பு, எஸ்.சி.-எஸ்.டி. மக்கள்தொகை, நகரமயமாக்கல், போக்குவரத்து வசதி ஆகிய குறியீடுகளின் அடிப்படையில் கமிட்டி பட்டியலை தயாரித்துள்ளது.
பீகார், ஒரிஸ்ஸா, மத்திய பிரதேசம், சட்டீஷ்கர், ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடையாத பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மணிப்பூர், மேற்கு வங்காளம், நாகலாந்து, ஆந்திர பிரதேசம், ஜம்மு-கஷ்மீர், மிசோராம், திரிபுரா, கர்நாடகா, சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மத்திய நிதி அனுமதிக்கும்போது பட்டியலில் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும். மாநிலங்களின் வளர்ச்சிக்கான தேவை, வளர்ச்சிப் பணிகள் நடத்துவதில் பொறுப்புணர்வு ஆகியவற்றை பரிசோதித்து நிதி வழங்க வேண்டும் என்று கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரகுராம் ராஜன் கமிட்டி தனது அறிக்கையை மத்திய நிதியமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் நேற்று தெரிவித்தார். அறிக்கையின் விவரங்கள் பற்றி அவர் கூறியதாவது:
மொத்தம் உள்ள 28 மாநிலங்கள் பல்நோக்கு குறியீட்டு எண் (எம்.டி.ஐ.) அடிப்படையில் வளர்ந்த மாநிலங்கள், வளரும் மாநிலங்கள் (குறைந்த வளர்ச்சி), பின்தங்கிய மாநிலங்கள் என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
நிதி ஒதுக்கீடு பற்றி கமிட்டி அளித்துள்ள பரிந்துரையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அடிப்படையாக நிலையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலங்களின் தேவைகள், மேம்பாட்டுச் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அவைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மாநிலங்களுக்கு அடிப்படை நிதி ஒதுக்கீடான 0.3 சதவீததத்தை மேலும் அதிகரிக்க சம்பந்தப்பட மாநிலங்களின் வளர்ச்சியை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் அவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு அளிக்க இரட்டை பரிந்துரை செய்யப்படும்.
இந்த இரண்டு பரிந்துரைகளை செயல்படுத்தும்போது, சிறப்பு அந்தஸ்தின் கீழ் குறிப்பிட்ட மாநிலங்கள் கூடுதல் நிதி ஒதுக்கீடு கேட்பதை தவிர்க்க முடியும் என்றார்.
தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ.) வகுத்துள்ள அடிப்படையில் தனிநபர் நுகர்வு, வறுமை விகிதம் மற்றும் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்ய எடுத்து கொள்ளப்படும் பல்வேறு காரணிகள் அடிப்படையில் மாநிலங்களின் பின்தங்கிய நிலைமையை கணிக்கும் பல்நோக்கு குறியீட்டு எண் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 0.6 புள்ளிகள் மற்றும் அதற்கும் மேல் புள்ளிகள் பெற்ற மாநிலங்கள் பின்தங்கியவையாகவும், 0.6 முதல் 0.4 வரையிலான புள்ளிகளைக் கொண்ட மாநிலங்கள் வளரும் (குறைந்த வளர்ச்சி) மாநிலங்களாகவும் 0.4 புள்ளிக்குக் கீழ் உள்ள மாநிலங்கள் வளர்ந்த மாநிலங்களாகவும் கருதப்படும்.
thoothuonline thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக