puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 19 செப்டம்பர், 2013

4 வயது மகனை கொன்று பிட்சா சாப்பிட்ட பாசக்கார தாய்

4 வயது மகனை கொன்று பிட்சா சாப்பிட்ட பாசக்கார தாய்

பிரிட்டனில் 4 வயது மகனைக் கொன்று, இறந்த மகனின் சடலத்தோடு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வாழ்ந்ததாக கைது செய்யப்பட்ட பெண் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.


பிரிட்டன் பிராட்போர்டு நகரில் வசித்து வரும் 43 வயது பெண்மணி அமந்த குட்டன். இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் குட்டன் வீட்டைச் சோதனையிட்டனர்.


அப்போது அவரது படுக்கை அறையிலிருந்து சுமார் நான்கரை வயது சிறுவன் ஒருவனின் பதப்படுத்தப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டது.


அந்த சிறுவனின் சடலம் குட்டனின் மகன் என்பதும், அவனது பெயர் ஹம்சா கான் என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.


போலீஸ் கைப்பற்றிய குழந்தையின் சடலத்தில் 6 மாதம் முதல் 1 வயது வரை எடை கொண்ட குழந்தைகள் அணியும் ஆடை உடுத்தப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


விசாரணையில், குழந்தை உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாடால் இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது. குழந்தைக்குரிய மருத்துவ வசதிகளையும் குட்டன் செய்து கொடுக்கவில்லை என்பது விசாரணையில் அம்பலமானது.


இறந்த ஹம்சாவின் உடலை அந்த அறையின் கட்டிலிலேயே சுமார் 2 ஆண்டுகள் வரை வைத்து குட்டன் பாதுகாத்து வந்துள்ளார்.


மதுபானம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான குட்டனின் அறையானது மிகவும் துர்நாற்றத்துடன் இருப்பதையும் விசாரணைக்குழு உறுதி செய்துள்ளது.


பிராட்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் அமந்தா குட்டன் மீது விசாரணை நடந்து வருகிறது. ஆனால், தான் கொலை செய்யவில்லை என்று அமந்தா தரப்பில் மறுக்கப்படுகிறது.


ஆனால், குழந்தை இறந்த சிறிது நேரத்திலேயே குட்டன் பீட்சா ஆர்டர் செய்து சாப்பிட்டதும், தொடர்ந்து குழந்தைகளுக்கான நல உதவிகளை பெற்று வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


அமந்தா குட்டனின் கணவர் அப்டாப் கான் அவரை விட்டு முன்னரே பிரிந்து சென்று வேறு எங்கோ வசித்து வருவது குறிப்பிடத்தக்கது



thamilan thanks

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக