puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 5 ஜூலை, 2013

சவுதியிலிருந்து வெளியேற ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பம்

புதிய சட்டத்தால் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து 16,000 க்கும் அதிகமானவர்கள் சவுதியிலிருந்து வெளியேற தற்காலிக அனுமதி பத்திரத்தை கோரியுள்ளார்கள் என சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவில் வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்பவர்கள் தொடர்பிலான புதிய சட்டம் நடைமுறைக்கு வருவது நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வெளியேற பல நாட்டவர்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
தமது நாட்டில் பணி புரிபவர்கள் முறையான அனுமதியை பெற்றிருக்க வேண்டும், சவுதி அரேபிய குடிமக்களுக்கு வேலைகளில் முன்னுரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் நிதாகத் எனும் புதிய சட்டத்தை அந்நாடு அறிமுகப்படுத்தியது.
இதன் காரணமாக இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படக் கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து பல நாடுகள் சவுதி அரேபிய அரசிடம் முறையிட்டன. இந்தியா உட்பட பல நாடுகள் ராஜதந்திர ரீதியில் அழுத்தங்களையும் பிரயோகிக்க ஆரம்பித்தன.

ஒத்திவைப்பு

சவுதி மன்னர் அப்துல்லாஹ்
பன்னாட்டு வேண்டுகோள்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக இன்று(3.7.13) நடைமுறைக்கு வரவிருந்த சட்டத்தை நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக சவுதி மன்னர் அறிவித்தார்.
சவுதி அரேபியாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தம்மீதான நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு நாட்டைவிட்டு வெளியேற தற்காலிக அனுமதி பத்திரங்களை கோரியுள்ளதாகவும் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சவுதியில் வேலைக்கு செல்லும் பலரது கடவுச் சீட்டுகள் அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அல்லது முதலாளிகளால் கைப்பற்றப்படுகின்றன தேவைப்படும் போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன.

இலங்கைக்கு திரும்பிச் சென்று, பின்னர் உரிய முறையில் அனுமதி பெற்றும் மீண்டும் சவுதிக்கு வேலைக்கு வர விரும்புவர்களுக்கு அரசும், தமது தூதரகமும் வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்கும் எனவும் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறா

ppc thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக