puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 31 ஜூலை, 2013

ஆந்திராவில் தனித் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர சட்டத்துறை அமைச்சர் ராஜினாமா

'ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர சட்டத்துறை அமைச்சர் தமது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியிடம் கொடுத்துள்ளார்.

ஆந்திராவில் தனி தெலுங்கானா வேண்டாம் என்பவர்கள் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், ஆந்திராவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. சென்னையில் இருந்து சேலம், பழனி, தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக ஆந்திரா செல்லும் சுமார் 106 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஆந்திராவிற்குள் நுழைய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால், கிருஷ்ணகிரி எல்லையிலேயே அனைத்து பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் திருப்பதியில் இன்று  144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பக்தர்கள் பெருமளவில்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனித்தெலுங்கானா அமைந்தால் தாம் பதவியை ராஜினாமா செய்யபோவதாக முதலில் அறிவிப்பு வெளியிட்ட கிரண்குமார் ரெட்டி, தற்போது அந்த முடிவில் இருந்து பின்வான்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்நிலையில் அவரது அமைச்சரவையின் சட்டத் துறை அமைச்சர் பிரதாப் ரெட்டி, தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரை அடுத்து மேலும் பல அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக