puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 5 ஜூலை, 2013

தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களைத் தடுக்க கொள்கை வகுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல் காலப்பிரச்சாரங்களின் போது இனி அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடுக்கும் வகையில் கொள்கை வகுக்குமாறு தேர்தல் ஆணையகத்திற்கு உச்ச நீதிமன்றம் வலியிறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியில் இலவசமாக தொலைக்காட்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு லஞ்சம் வழங்குவது போன்றது எனக்கூறி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அவர்  இலவச அறிவிப்புக்கள் மக்கள் அளிக்கும் வாக்கில் நிச்சயம் பிரதிபலிக்கும். இலவச பொருட்கள் அறிவிப்பதை தடுக்க கொள்கைகள் வகுக்க வேண்டியது அவசியமானது. எனினும் இந்திய அரசியலமைப்பு சட்டம் 123ன் படி, அரசியல் கட்சிகளின் வாக்குறுதியில், இலவசமாக தொலைக்காட்சியோ, லேப்டாப்போ அளிப்பதாக உறுதி அளிப்பதை லஞ்சமாக கருதமுடியாது எனக்கூறினார்.

தமிழகத்தில் முன்னைய திமுக ஆட்சியின் போது வண்ணத் தொலைக்காட்சி, எரிவாயு இணைப்புடன் கூடிய ஸ்டவ்கள் போன்றன தேர்தல் வாக்குறுதியின் படி இலவசமாக வழங்கப்பட்டன.

அதன் பின்னர் அமைந்த அதிமுக ஆட்சியில், லேப்டாப்கள், மிக்சி,கிரைண்டர், மின்விசிறி என்பன இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான இலவச வாக்குறுதிகள் வழங்கப்படுவது, ஜனநாயக முறைப்படி நடைபெறும் தேர்தலின் அடித்தளத்தில் ஆட்ட காணச்செய்கிறது. எனவே தேர்தல் ஆணையம் இது தொடர்பில் முறையான கொள்கைகளை வகுக்க வேண்டும் என கூறியுள்ளது.

4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக