puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 11 ஜூன், 2013

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து: 4 பெண்கள் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வடக்குதிட்டம்குளம் கிராமத்தில் திலகரத்தினம் தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. 11.06.2013 செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 3 மணி அளவில் தீப்பெட்டி ஆலையில் உள்ள பணியாளர்கள் வேலையில் மும்மரமாக இருந்தனர். 


அப்போது மருந்துகள் அடங்கிய தீக்குச்சி பார்களை ஒரு கண்டெய்னரில் இருந்து மற்றொரு கண்டெய்னருக்கு மாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரத உரசல் காரணமாக தீக்குச்சி பார்கள் தீப்பிடித்தன. 
இந்த தீ மளமளவென பரவியது. இந்த புகை மூட்டத்தில் சிக்கிக்கொண்ட பெண்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால், கோவில்பட்டி அருகே உள்ள 6 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். 
இந்த விபத்தில் உமா மகேஷ்வரி (18), லெட்சுமி (55), சுகந்தி (23), பானுமதி (45) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக கிழக்கு காவல்நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 




செய்தி: பரமசிவம்
படங்கள்: ராம்குமார்


nakkheeran thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக