puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 27 மே, 2013

இராமநாதபுரம் முகவை ஊரணியில் உள்ள ஆகாய தாமரை, செடிகளை உடனே அகற்றி கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், நகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ உத்தரவு: MONDAY, 27 MAY 2013 19:38 ADMINISTRATOR


E-mailPrintPDF
இராமநாதபுரம் மே 28: மாவட்ட தலைநகரான இராமநாதபுரம் நகரில் பழமையான பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் முகவை வரும் முகவை ஊரணியில் உள்ள ஆகாய தாமரைகள்,செடி கொடிகளை உடனே அகற்றி கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என இராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உத்திரவிட்டார்.

இராமநாதபுரம் அரண்மனையின் பின்புறமுள்ள பழமையான முகவை ஊரணி உள்ளது. இந்த ஊரணி நகரின் குடிநீர் தேவையையும்,நிலத்தடி நீர் மட்டத்தையும் பாதுகாத்து வருகிறது. இந்நிலையில் அண்மைக் காலமாக இந்த ஊரணியில் ஆகாய தாமரைகளும், செடி கொடிகளும் முழுமையாக வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் இராமநாதபுரம் நகரின் குடிநீர் தேவை மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் எம்.எல்.ஏ விடம் நேரில் முறையிட்டனர். அப்போது அருகே உள்ள ஊராட்சி பகுதிகளிருந்து கழிவு நீரும் இந்த ஊரணி பகுதிக்குள் வாய்க்கால் மூலம் விடப்படுவதாகவும் முறையிட்டனர்.இதனை தொடர்ந்து இந்த ஊரணிப் பகுதியை இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் (பொ) மதைவானனுடன் சென்று எம்.எல்.ஏ பார்வையிட்டார். அப்போது ஊரணியை ஆக்கிரமித்துள்ள அனைத்து ஆகாய தாமரைகளையும் கழிவு நீர் கலப்பதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்திரவிட்டார். அதற்கு பதிலளித்த நகராட்சி ஆணையாளர் இராமநாதபுரம் நகரின் பிரதான ஊரணியை பாதுகாக்கவும் செடி கொடிகளை அகற்றவும் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

த.மு.மு.க.மாவட்ட செயலார் பி.அன்வர் அலி, மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், இராமநாதபுரம் ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பாகர் அலி, பசீர் அகமது, அகமது இப்ராஹிம், பரக்கத்துல்லா, பிஸ்மி (எ)நசுருதீன், ஜஹாங்கீர் அலி, அப்துல் ரஹ்மான் மற்றும் த.மு.மு.க., ம.ம.க. வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
LAST UPDATED ( MONDAY, 27 MAY 2013 19:49 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக