புதுடெல்லி, மே 10-
டெல்லி லோதி சாலையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் வளாகத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை அலுவலகம் உள்ளது. 4 தளங்களைக் கொண்ட இந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில், ரிசர்வ் போலீஸ் படையின் தகவல் தொடர்பு கிளை தொடர்பான சில ஆவணங்கள் தீயில் கருகின. ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
தகவல் அறிந்ததும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி லோதி சாலையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் வளாகத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை அலுவலகம் உள்ளது. 4 தளங்களைக் கொண்ட இந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில், ரிசர்வ் போலீஸ் படையின் தகவல் தொடர்பு கிளை தொடர்பான சில ஆவணங்கள் தீயில் கருகின. ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
தகவல் அறிந்ததும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக