puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 20 மே, 2013

சன்னி-ஷியா பிரிவினரிடையே தொடர் வன்முறைக்கு 112 பேர் பலி..!

[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:17.36 பி.ப GMT ]
ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே சமய நம்பிக்கையில் வேறுபாடு காரணமாக மோதல்கள் நடந்து வருகின்றன.ஈராக்கை ஆண்டு வரும் ஷியா முஸ்லிமான நவுரி மாலிகியின் ஆட்சிக்கு எதிராக சன்னி பிரிவு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அரசுக்கும், சன்னி பிரிவு ஆயுதம் ஏந்தியவர்களுக்கும் இடையே சமீப காலமாக தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதில் பலர் கொல்லப்பட்டு வ்ருகின்றனர்.

இந்நிலையில், இன்று பாக்தாத், ஷாப், பஸ்ரா, பலாட் ஆகிய இடங்களில் சன்னி, ஷியா பிரிவு மக்கள் வசிக்கும் பகுதிகளில் இரு பிரிவு போர்க்குணம் கொண்டவர்கள் நடத்திய கார்குண்டு தாக்குதல்களில் குறைந்தது 112 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த புதன்கிழமை முதல் ஈராக்கில் சந்தைகள், பேருந்து நிறுத்தங்கள் என பல இடங்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 230 தாண்டியுள்ளது. இதனால் அங்கு உள்நாட்டு போர் தொடங்கி விட்டது என்று கூறப்படுகிறது.

சிரியாவில் நடைபெற்று வரும் பிரிவினைவாத போரால் இங்கும் அது போன்று ஒரு நிலையை கொண்டு வர அல்கொய்தா ஆதரவுடன் செயல்படும் போர்க்குணம் கொண்டோரின் முயற்சிகள் தவிடுபொடியாக்கப்படும் என்று பிரதமர் நவுரி மாலிகி கூறியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று கடத்தப்பட்ட 8 போலீஸ்காரர்கள் துப்பாக்கியல் சுட்டுக் கொல்லப்பட்டு அன்பர் பகுதியில் இறந்து கிடந்தனர்.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக