![பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 21 பேர் பலி பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 21 பேர் பலி](http://mmimages.maalaimalar.com/Articles/2013/Apr/65f6c618-7b40-42ae-94aa-1d900fe383ed_S_secvpf.gif)
இஸ்லமாபாத், ஏப். 16-
பாகிஸ்தான் தென்மேற்கு பகுதி பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை 3.44 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.9 அக பதிவானது. இதனால் பஞ்கர் மற்றும் கரன் மாவட்டங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன.
இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 21 பேர் உயிரிழந்தனர். இதன் தாக்கத்தால் கராச்சியிலும் வீடுகள் இடிந்து பலர் பாதிக்கப்பட்டனர். மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஈரானை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் அங்கு 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் தாக்கங்கள் அரேபிய நாடுகள் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டது.
maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக