puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 18 மார்ச், 2013

பெண் SI தற்கொலை - நெல்லை இன்ஸ்பெக்டர் கைது


FILE
சேலத்தில், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்கு காரணமானவர் என நெல்லை இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ஜெயப்பிரபா (வயது 32). இவர் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

சில நாட்களில், ஜெயப்பிரபாவிற்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ராஜதுரை என்பவருடன், பழக்கம் ஏற்பட்டது. ராஜதுரை தற்போது திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ராஜதுரை ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதை மறைத்து ராஜதுரை, ஜெயப்பிரபாவை கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில மாதங்களாக, ஜெயப்பிரபா, சேலம் ஜட்ஜ் ரோடு பகுதியில் வசித்து வந்தார். இந்த வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் ராஜதுரை மாதத்தில் இரண்டு, மூன்று நாட்கள் வந்து தங்கி செல்வார். இதுபோல் நேற்று முன்தினமும் இன்ஸ்பெக்டர் ராஜதுரை வந்தார். அப்போது அவருக்கும், ஜெயப்பிரபாவிற்கும் வாய்தகராறு ஏற்பட்டது.

இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயப்பிரபா, ராஜதுரை இருந்த அறைக்கதவை பூட்டி விட்டு மற்றொரு அறைக்கு சென்று பேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சேலம் கன்னங்குறிச்சி போலீசாரிடம் ஜெயப்பிரபாவின் தாயும், அண்ணனும், ஜெயப்பிரபாவை இன்ஸ்பெக்டர் ராஜதுரை பல நாட்களாக அடித்து துன்புறுத்தி வருவதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் ஜெயப்பிரபாவின் தற்கொலைக்கு காரணம் எனப் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், இன்ஸ்பெக்டர் ராஜதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

tamil.webdunia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக