puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 7 மார்ச், 2013

தனி ஈழம் அமைப்பது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்


-
மார்ச் 07, 2013  
 
இலங்கையில் தனி ஈழம் அமைப்பது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் டெசோ அமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தலைமை உரையாற்றியபோது, இந்தக் கருத்துகளை ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கில் மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி. கனிமொழி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேனல் 4 தொலைக்காட்சியின் " நோ ஃபயர் ஜோன்" ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் இந்தக் கருத்தரங்கில் திரையிடப்பட்டன.
ஈழத் தமிழர் பிரச்னையை பிற மாநிலத்தவரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தக் கருத்தரங்கு நடத்தப்படுவதாக டெசோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இலங்கைப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க சுயேச்சையான ஆணையத்தை நியமிக்க வேண்டும் என்று, டெசோ கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

/puthiyathalaimurai.tv thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக