-
மார்ச் 07, 2013
இந்தக் கருத்தரங்கில் மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி. கனிமொழி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேனல் 4 தொலைக்காட்சியின் " நோ ஃபயர் ஜோன்" ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் இந்தக் கருத்தரங்கில் திரையிடப்பட்டன.
ஈழத் தமிழர் பிரச்னையை பிற மாநிலத்தவரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தக் கருத்தரங்கு நடத்தப்படுவதாக டெசோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இலங்கைப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க சுயேச்சையான ஆணையத்தை நியமிக்க வேண்டும் என்று, டெசோ கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
/puthiyathalaimurai.tv thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக