[திங்கள் - 18 மார்ச்-2013 - 12:48:39 காலை ] | |
சம்பா பயிர் பாதிப்பு, வறட்சி நிலவரம் குறித்து இராமநாதபுரம் மாவட்டத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் ஆய்வு நடத்தினர். இராமநாதபுரம் மாவட்டத்தில் நயினார்கோவில், அரியாங்கோட்டை, ஆர்.எஸ்.மங்கலம், சோழந்தூர், வடவயல், நாரணமங்கலம் ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்களை பார்வையிட்டு உயர்மட்டக்குழுவினர் ஆய்வு நடத்தினர். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்போது, பயிர் பாதுகாப்பு குறித்து உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். 50-சதவீதத்திற்குமேல், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விவரம் n;தரிவித்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. இதனையும் உயர்மட்டக்குழுவினர் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர். தொடர்;ந்து விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஆய்வின்போது, அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தாமோதரன், தோப்புவெங்கடாச்சலம், சுந்தர்ராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மாவட்ட நிர்வாகிகள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். | |
காணொளி செய்திகள் tamilantelevision thanks |
puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
திங்கள், 18 மார்ச், 2013
சம்பா பயிர் பாதிப்பு, வறட்சி நிலவரம் குறித்து இராமநாதபுரத்தில் ஆய்வு! உயர்மட்டக்குழுவிடம் விவசாயிகள் முறையீடு!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக