மதுரா, மார்ச் 12-
உத்தரபிரதேச மாநிலம் மதுரா-பிருந்தாவன் சாலையில் இன்று காலை கல்லூரி பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அந்த பஸ்சை முந்திச் செல்ல முயற்சித்த பயணிகள் ஆட்டோ மீது பஸ் மோதியதில் 4 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து நிகழ்ந்த கொத்வாலி பகுதியை சேர்ந்த மக்கள், அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மதுரா சூப்பிரண்ட் பிரதீப் யாதவ் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து போக்குவரத்தை சீர்படுத்தினர்.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா-பிருந்தாவன் சாலையில் இன்று காலை கல்லூரி பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அந்த பஸ்சை முந்திச் செல்ல முயற்சித்த பயணிகள் ஆட்டோ மீது பஸ் மோதியதில் 4 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து நிகழ்ந்த கொத்வாலி பகுதியை சேர்ந்த மக்கள், அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மதுரா சூப்பிரண்ட் பிரதீப் யாதவ் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து போக்குவரத்தை சீர்படுத்தினர்.
maalaimalar. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக