
ராமநாதபுரம், மார்ச். 16-
19 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் இன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மீனவர்கள் தொடங்கினர். இதனால் அனைத்து விசைப் படகுகளும் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை யினர் அடிக்கடி பிடிப்பதும், படகு மற்றும் வலைகளை சேதப்படுத்துவதும் நடந்து வருகிறது.
கடந்த 13-ம் தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடத்தை சேர்ந்த 19 மீனவர்கள், 4 படகுகளில் மீன்பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் மேலும் 34 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்ததால் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இலங்கையின் செயலை தமிழக அரசியல் கட்சிகளும் கடுமையாக கண்டித்தன. இது தொடர்பாக கட்சிகளின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கடுமையாக வாதிட்டனர். இதற்கிடையில் ராமேசுவரத்தில் அவசர கூட்டம் நடத்திய மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். இந்த நிலையில் 34 மீனவர்களையும் தலை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தற்போது நெடுந்தீவில் இருக்கும் அவர்கள் விரைவில் ராமேசுவரம் வர உள்ளனர். இதனால் மீனவர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்படுமா? என கேள்வி எழுந்தது. ஆனால் இதனை மறுத்த மீனவர்கள் 13-ம் தேதி பிடிக்கப்பட்ட 19 மீனவர்களை விடுதலை செய்யாததால் போராட்டம் திட்டமிட்டப்படி நடை பெறும் என்றனர்.
அதன்படி நேற்று மாலை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. 850 விசைப்படகுகளும் துறைமுகத்தில் இருந்து அந்தோணியார் கடல் பகுதி வரையிலும் நங்கூரமிட்டு கடலில் நிறுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மேலும் அவர்களை சார்ந்த மீன் வாங்குவோர், விற்போர் என பலரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் துறைமுகம் வெறிச்சோடியே காணப்பட்டது. வருகிற 22-ம் தேதிக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் ராமேசுவரத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
19 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் இன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மீனவர்கள் தொடங்கினர். இதனால் அனைத்து விசைப் படகுகளும் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை யினர் அடிக்கடி பிடிப்பதும், படகு மற்றும் வலைகளை சேதப்படுத்துவதும் நடந்து வருகிறது.
கடந்த 13-ம் தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடத்தை சேர்ந்த 19 மீனவர்கள், 4 படகுகளில் மீன்பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் மேலும் 34 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்ததால் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இலங்கையின் செயலை தமிழக அரசியல் கட்சிகளும் கடுமையாக கண்டித்தன. இது தொடர்பாக கட்சிகளின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கடுமையாக வாதிட்டனர். இதற்கிடையில் ராமேசுவரத்தில் அவசர கூட்டம் நடத்திய மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். இந்த நிலையில் 34 மீனவர்களையும் தலை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தற்போது நெடுந்தீவில் இருக்கும் அவர்கள் விரைவில் ராமேசுவரம் வர உள்ளனர். இதனால் மீனவர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்படுமா? என கேள்வி எழுந்தது. ஆனால் இதனை மறுத்த மீனவர்கள் 13-ம் தேதி பிடிக்கப்பட்ட 19 மீனவர்களை விடுதலை செய்யாததால் போராட்டம் திட்டமிட்டப்படி நடை பெறும் என்றனர்.
அதன்படி நேற்று மாலை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. 850 விசைப்படகுகளும் துறைமுகத்தில் இருந்து அந்தோணியார் கடல் பகுதி வரையிலும் நங்கூரமிட்டு கடலில் நிறுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மேலும் அவர்களை சார்ந்த மீன் வாங்குவோர், விற்போர் என பலரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் துறைமுகம் வெறிச்சோடியே காணப்பட்டது. வருகிற 22-ம் தேதிக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் ராமேசுவரத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக