மும்பை, மார்ச் 16-
உலகின் பொருளாதார மையமாக ஆசிய நாடுகள் வளர்ச்சி பெறத் தொடங்கியதிலிருந்தே ஆசிய நகரங்களும் வளர்ச்சியைக் காணத் தொடங்கின. சக்தி மிக்கவர்களும், பணக்காரர்களும், அமெரிக்க, ஐரோப்பா கண்டங்களில் பரவி இருந்தாலும், இந்தியாவும் பணக்காரர்களின் நாடாக விரைந்து வளர்ந்து வருகிறது. 150 முதல் 160 கோடி வரை நிகர சொத்து மதிப்புடைய தனிநபர்களின் எண்ணிக்கை, அடுத்த 10 வருடங்களில் இங்கு இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையிலும், தனிநபர் சொத்து மதிப்பு, மும்பையில் 137 சதவிகிதமாகவும், டெல்லியில் 120 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளதாக நைட் பிரான்க் வெல்த் ரிப்போர்ட் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. உலகின் முதல் 30 பணக்கார நகரங்களில், மும்பை ஏழாவது இடத்தையும், டெல்லி பதினோராவது இடத்தையும் பிடித்துள்ளதாகவும், 122 கோடீஸ்வரர்களுடன் இந்தியா முதல் 10 பணக்கார நாடுகளில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
ஆசிய கண்டத்தைப் பொறுத்தவரை, அடுத்த பத்தாண்டுகளில், உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாத அளவிற்கு தனி நபர் சொத்து விகிதம் 88 சதவிகிதம் உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக இந்த நிறுவனத்தின் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
.maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக