Tuesday, February 12, 2013
புதுடெல்லி: பொதுமக்களுக்கு அடுத்த கசப்பு மருந்தைத் தர மத்திய அரசு தயாராகிவிட்டது. விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று தெரியவந்துள்ளது.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் முன்பை விட விலை உயர்ந்துள்ளது. எனவே இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. அதனடிப்படையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 50 பைசாவும், ஒரு லிட்டர் டீசலுக்கு 1 ரூபாயும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டீசல் விலை உயர்வு காரணமாக, அத்தியவாசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கும், எரிபொருள் பணவீக்கத்திற்கும் வழிவகை செய்யும் என்று தெரியவந்துள்ளது.
வரும் 2014-2015-ம் ஆண்டுக்கான டீசல் மானியங்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு முன்னதாகவே அறிவித்து உள்ளது. பன்னாட்டு சந்தையில் எரிபொருட்களின் விலையேற்றத்தால், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 11 ரூபாயும், ஒவ்வொரு எல்.பி.ஜி. சிலிண்டருக்கும் ரூ.500 நஷ்டம் ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நஷ்டத்தைச் சமாளிக்கவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக