puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 7 பிப்ரவரி, 2013

காவல் நிலையத்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது


First Published : Thursday , 7th February 2013 





காவல் நிலையத்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது,Constable arrest for rape
காவல் நிலையத்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். எஸ்ஐ உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சித்தூர் அடுத்த எஸ்.ஆர்.புரம் மண்டலம் மிட்டா கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண், கடந்த 3ம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் அவரை வைத்திருந்தனர். அப்போது அந்த பெண்ணை கார்வேட் நகரத்தை சேர்ந்த போலீஸ்காரர் கோபி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இளம்பெண், இதுகுறித்து சித்தூர் எஸ்.பி.யிடம் நேற்று புகார் செய்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் எஸ்.பி. அன்னபூர்ணா நியமிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சித்தூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், இரவு நேரத்தில் மகளிர் போலீஸ் இல்லாமல் காவல் நிலையத்தில் இளம்பெண்ணை வைத்திருந்ததற்காக எஸ்.ஐ. ரவிநாயக், உதவி எஸ்.ஐ. ராஜேந்திரா, கான்ஸ்டபிள் ரமணா ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. கிராந்தி ராணா டாடா நேற்று உத்தரவிட்டார். பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படும் போலீஸ்காரர் கோபி அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் சொந்த மாவட்டமான சித்தூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.tamilkurinji. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக