puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

சிறிலங்கா இராணுவத்துக்கு சர்வதேச ரீதியாக மற்றுமொரு நெருக்கடி!



on 22 February 2013.
சிறிலங்கா படையினர் பாலியல் ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சிறிலங்காவுக்கு எதிராக...

மனித உரிமை கடுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழ் பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மூன்றாம் தர துன்புறுத்தல்களை படையினர் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தி இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


140 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை மனித உரிமை கண்காணிப்பகம் தயாரித்துள்ளது. 2006ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் 75 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அதிகளவான பாலியல் ரீதியான துன்புறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.


இந்த குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் விடுதலைப் புலி ஆதரவு பிரச்சாரமாக நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த மெத்தனப் போக்கினால் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
eutamilar. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக