puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 27 பிப்ரவரி, 2013

சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் ஆதாரம் இருந்தும் தொடர்ந்து இலங்கையர்களை திருப்பும் பிரித்தானியா




பிரித்தானியாவிலிருந்து மேலும் 65 இலங்கை தமிழர்களை நாடுகடத்துவதற்கு பிரித்தானியா முடிவெடுத்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பதுடன் அகதி அந்தஸ்து நிராகரிக்கபப்ட்டவர்கள் ஆவார்கள். அண்மையில் இவ்வாறு நாடுகடத்தப்பட்ட 15 பேர் இலங்கையில் மீண்டும் சித்திரவதைகளுக்கு உள்ளான சாட்சியங்களை நிரூபித்தமையினால் பிரித்தானியாவில் மீண்டும் அகதி அந்தஸ்து பெற்றிருந்தனர்.

இந்நிலையிலும்,  இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பல்வேறு ஆவணங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையிலும், பிரித்தானிய அரசின் இப்புதிய நடவடிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து எதிர்வரும் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் இவர்கள் அனைவரும் இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளனர் என சேனல் 4 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படுவோர் அங்கு சித்திரவதைகளுக்கு உள்ளாகிறார்கள் என தெரிந்தும் இந்த இறுமாப்பான, அலட்சியாமான நடவடிக்கையை பிரித்தானிய அரசு தொடர்ந்து மேற்கொள்வதாக அவர்களின் வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உண்மையில் பாதுகாப்பு தேவையானவர்களுக்கு புகலிடம் வழங்குவதில் இங்கிலாந்து பெருமைக்குரிய நாடாகவே இருந்து வருகிறது. ஆனால் எமது  பாதுகாப்பு அவசியமற்றது என நாம் கருதுபவர்களையே திருப்புகிறோம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையிலேயே அவர்களது புகலிட கோரிக்கையின் தகமைகளை ஆராய்கிறோம்.  மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றமும், அனைத்து தமிழ் புகலிட கோரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு அவசியமானது என்றில்லை என கூறியுள்ளது என பிரித்தானிய எல்லை கட்டுப்பாட்டு ஏஜென்ஸி தெரிவிக்கிறது.

இலங்கைக்கு பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் புகலிட கோரிக்கையாளர்கள் அங்கு துன்புறுத்தப்படுகின்றனர் என்பதற்குரிய மிக வலுவான ஆதாரம் இருந்தும் இங்கிலாந்து அரசு இந்நடவடிக்கை எடுத்திருப்பதாக சித்திரவதைகளிலிருந்து பாதுகாப்புக்கான அமைப்பின் தலைவர் பெஸ்ட் கவலை வெளியிட்டுள்ளார்.

 .4tamilmedia.thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக