puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 16 பிப்ரவரி, 2013

கொலை வழக்கில் சிறைக்கு சென்ற ஆண், பெண்ணாக விடுதலையான சம்பவம்

[ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 10:25.25 மு.ப GMT ]
பிரித்தானியாவில் நபரொருவர் சிறை தண்டனையை முடித்து விட்டு வெளியே வரும்போது பெண்ணாக காட்சி தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கென்ட் மெய்ட்ஸ்டோனைச் சேர்ந்த றாபொர்ட் ஹில்டன், கடந்த 1992ம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
உள்ளே போகும் போது றாபொர்டாக அதாவது ஆணாக போனவர், தற்போது வெளியே வரும்போது ரிபெக்காவாக அதாவது பெண்ணாக திரும்பியுள்ளார். சிறு வயதிலிருந்தே தான் ஒரு பெண் என்ற உணர்வுடன் வளர்ந்து வந்த றாபொர்ட், அதற்கேற்ப அவரது உடலிலும் மாற்றங்கள் இருந்தன.
இருந்தாலும் இதை அப்போது அவர் பெரிதாக கவனிக்கவில்லை. மேலும் சமூக ரீதியாகவும் அவர் பல பிரச்சினைகளை சந்தித்து வந்த நிலையில்தான் 1992ம் ஆண்டு அவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக்குப் போய் விட்டார்.
பல வருடத்தை சிறையில் கழித்த அவர், 2011ம் ஆண்டு பாலின மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார். முழுமையான பெண்ணாக மாறினார்.
சமீபத்தில் அவர் விடுதலையானார். பல காலம் ஆண்கள் சிறையில் இருந்த அவர் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார். இரு சிறைகளிலும் இருந்த காலத்தை மிகவும் கஷ்ட காலம் என்று சொல்கிறார் றாபொர்ட்.
சிறையில் தான் பல சோதனைகளை சந்திக்க நேரிட்டதாகவும், மிகுந்த மன வலியுடனும், வலிமையுடனும் அதை சந்தித்து சமாளித்ததாகவும் கூறுகிறார் றாபொர்ட் என்கிற ரிபெக்கா.
newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக