புழல்
சிறையில் கைதிகள் மோதல்: ஒருவர் படுகாயம்
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 15,
சென்னை, பிப். 15-
ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சென்னை புழல் சிறையில் மருத்துவ வசதி சரியில்லை என்று கைதிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக சமீபத்தில் 2 செல்களில் உள்ள கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் 2 கைதிகள் இறந்ததாக கூறினர். இந்த போராட்டம் தீவிரமடைந்தபோது, போலீசாருடன் கைதிகள் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று அங்குள்ள கைதிகள் ராஜா, அகிலன் ஆகியோருக்கிடையே திடீரென சண்டை மூண்டது. அப்போது கைதி ராஜா தாக்கியதில் அகிலன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. படுகாயமடைந்த அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த மோதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறைக்குள் செல்போன் பயன்படுத்துவதில் இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சென்னை புழல் சிறையில் மருத்துவ வசதி சரியில்லை என்று கைதிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக சமீபத்தில் 2 செல்களில் உள்ள கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் 2 கைதிகள் இறந்ததாக கூறினர். இந்த போராட்டம் தீவிரமடைந்தபோது, போலீசாருடன் கைதிகள் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று அங்குள்ள கைதிகள் ராஜா, அகிலன் ஆகியோருக்கிடையே திடீரென சண்டை மூண்டது. அப்போது கைதி ராஜா தாக்கியதில் அகிலன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. படுகாயமடைந்த அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த மோதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறைக்குள் செல்போன் பயன்படுத்துவதில் இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக